திருகோணமலையில் இரகசியமாக கஞ்சா செடி வளர்த்த நபர் கைது!

திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் சஜித் பிரேமதாசவினால் மானிய அடிப்படையில் கட்டிக்கொடுத்த வீட்டுக்குள் கஞ்சா செடியை வளர்த்த சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மொரவெவ பொலிஸாருக்கு நேற்று முன்தினம்(30) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட போது வீட்டிற்குள் 05 கஞ்சா செடிகளை வளர்த்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரகசிய தகவல்

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த முகம்மத் ரபீக் நிஸாம் (34வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor