ஆடை விற்பனை நிலையத்தினுள் திருட்டில் ஈடுபட்ட சகோதரிகள்

ஆடை விற்பனை நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து சுமார் 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆடைகளை திருடிய குற்றச்சாட்டில் சகோதரிகள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் கண்டியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் புத்தாண்டுக்கு அணிவதற்காகவே இவ்வாறு அக்காவும், தங்கையும் ஆடைகளைத் திருடியதாக சந்தேக நபர்கள் இருவரும் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் கைது செய்யப்பட்ட சகோதரிக்கு 28 வயது என்றும் அவரது தங்கைக்கு 25 வயது எனவும் கண்டி தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor