முல்லைத்தீவில் சிசு ஒன்றின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

முல்லைத்தீவு- துணுக்காய் ஐயங்குளம் பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசு ஒன்றின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கால்நடை மேய்ப்பாளர்கள் வழங்கிய தகவலுக்கமைய நேற்று சிசுவின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட நீதவான் கெங்காதரன் சிசுவின் எச்சங்களை பார்வையிட்டுள்ளார்.

முதிர்ச்சி பெறாத சிசு ஒன்றின் எச்சங்கள்
இந்நிலையில் மீட்கப்பட்ட எச்சங்கள் முதிர்ச்சி பெறாத சிசு ஒன்றின் எச்சங்கள் எனவும் சட்டவிரோத சிசு கருக்கலைப்பு மூலம் பிரசவிக்கப்பட்ட சிசுவின் எச்சங்களாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சிசுவின் மண்டை ஓடு, மற்றும் என்புகள், சுற்றப்பட்டிருந்ந துணிகள் மீட்கப்பட்டிருந்தன. மேலும் சம்பவம் தொடர்பில் ஐயங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor