கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுகளின் விலை குறைப்பு!

இன்று (18) நள்ளிரவு முதல் உணவகங்களில் கோதுமை மா பொருட்கள், கொத்து ரொட்டி மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலையை பத்து ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எல்பிட்டியவில் இன்று (18) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொத்து ரொட்டி போன்றே கோதுமை மாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மரக்கறி ரொட்டி, உருளை, பராட்டா போன்றவற்றின் விலையும் பத்து ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இந்த விலைக் குறைப்புடன் சேர்த்து கோதுமை மா பொருட்களின் விலைகளை உணவகங்களில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவை 250 ரூபாவாக குறைத்ததன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அசேல சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து சிற்றுண்டிகளின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி, பத்து ரூபாவால் சிற்றுண்டிகளின் விலை குறைக்கப்படுவதாக அந்த சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

மூலப்பொருட்களின் விலை குறைப்பு

சில மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு இறாத்தல் பாணின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டதுடன், சந்தையில் கோதுமை மாவின் விலையும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor