பிரபல வைத்தியசாலையில் உயிரை மாய்த்துக் கொண்ட பெண்!

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் 8ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் நீர்கொழும்பு அளுத்வத்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ள்ளார்.

கட்டிடத்தின் 8வது மாடியில் உள்ள ஜன்னலில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 14ஆம் திகதி முதல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

Recommended For You

About the Author: webeditor