ஓமானுக்கு பணிப்பெண்ணாக சென்று சித்திரவதைக்கு உள்ளாகி நாடு திரும்பிய பெண்!

ஓமானுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்று அங்கு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளான மற்றுமொரு பெண் நாடு திரும்பியுள்ளார்.

சிலாபம் – வீரகெலேவத்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு ஓமானில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சித்திரவதைகள்
கடந்த செப்டம்பர் மாதம் வீட்டு பணிப்பெண்ணாக அவர் ஓமானுக்கு சென்றிருந்த நிலையில் தற்போது நாடு திரும்பியுள்ளார்.

தம்மை தொழிலுக்கு அனுப்பிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்துடன் தொடர்புடைய நிறுவனத்தின் உரிமையாளரால் தமக்கு பல்வேறு சித்திரவதைகள் இழைக்கப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor