தென்கொரியாவில் மாயமான இலங்கை ரக்பி அணித்தலைவி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

தென் கொரியாவில் காணாமல் போன இலங்கை ரக்பி அணித் தலைவி துலானி பல்லகொன்தகே கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

தென்கொரியா சென்ற குழு
ஏசியன் செவன்ஸ் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக துலானி தலைமையிலான குழு தென்கொரியா சென்றிருந்தது.

போட்டிகளின் நிறைவில் துலானி காணாமல் போனதாகவும் தென்கொரிய பொலிஸாரின் உதவி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

காணாமல் போனமைக்கான காரணம்
இந்தப் பின்னணியில் துலானி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போனமைக்கான காரணங்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Recommended For You

About the Author: webeditor