திருகோணமலை பகுதியில் நீருடன் அடித்து செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

திருகோணமலையில் உள்ள கந்தளாய் குளத்தின் மூங்கில் ஆற்றினை கடக்க முற்பட்ட போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் (10-11-2022) இடம்பெற்றுள்ளது.

வான்எல பகுதியைச் சேர்ந்த சுபைதீன் ரமீஸ் என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த நபர் நேற்றையதினம் மாட்டுப்பட்டிக்கு மாடுகளை பார்ப்பதற்காக மாட்டு உரிமையாளருடன் சென்ற போது மூங்கில் ஆற்றினை கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது, அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor