இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்ரேலியாவில் கைது!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்று (5) அவர் அந்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்படடுள்ளார்.

பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தனுஷ்க குணதிலக்க இல்லாமல் இலங்கை கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியாவிருந்து கொழும்புக்கு புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..

Recommended For You

About the Author: webeditor