வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ள மெட்டா நிறுவனம்

உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மெட்டா நிறுவனம் புதிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பயனாளர்கள் தங்களுக்கே குறுந்தகவல் அனுப்பிக்கொள்ளும் வசதி குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் பரிசோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது பயனாளர்களின் தனி உரிமையை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

குறுந்தகவல் அனுப்பும் வசதி

அந்த வகையில் பயனாளர்கள் தங்களுக்கே குறுந்தகவல் அனுப்பிக்கொள்ளும் வசதி குறிப்பிட்ட ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.

தகவல்களை சேமிக்க உதவும் இந்த வசதியை, விரைவில் அனைவரும் பெறும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் புதிய புதுப்பித்தல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor