யாழில் வீதியால் சென்ற பெண்களை மிரட்டி வழிப்பறி!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் மூன்று பெண்களிடம் வழிப்பறி திருடர்கள் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அச்சுவேலி வைத்தியசாலை வீதியில் நடந்து சென்ற மூன்று பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விலாசம் கேட்பது போன்று பாசாங்கு செய்து திடீரென கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் போது பெண்ணொருவரின் தோட்டினை கழட்டும் போது , அது கழறாத போது, பெண்ணின் காதில் இருந்து தோடு பிடுங்கி எடுத்துள்ளனர்.

அதனால் அப்பெண்ணின் காதில் காயம் ஏற்பட்ட நிலையில் அச்சுவேலி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதேவேளை கொள்ளையடித்து செல்லப்பட்ட நகைகளில் ஒரு நகை கவரிங் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor