கடும் மழை காரணமாக யாழ் மாவட்டத்திற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

யாழ் மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி அடுத்த வரும் மணித்தியாலங்களில் எதிர்பார்க்கப்படுவதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் நேற்றைய தினம்கூறியிருந்தது.

துப்பரவுப்பணிகள்
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக யாழ்.நகர் பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளிலிருந்து பிரதான வெள்ள வடிகால்கள் ஊடாக வந்த பிளாஸ்ரிக் போத்தல்கள் உட்பட கழிவுகள் வடிகாலின் ஊடான நீரோட்டத்தினை தடை செய்தது.

இதனையடுத்து அகற்றும் பணிகளினை கடும் மழைக்கும் மத்தியில் யாழ்.மாநகர சபையின் வடிகால் தூய்மைப்படுத்தல் பணியாளர்கள் மேற் கொண்டு வருகின்றனர் .

Recommended For You

About the Author: webeditor