இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் அதிசொகுசு வாகனம் மோதியதில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் அதிசொகுசு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக மரணமடைந்தார்.

கடந்த மாதம் 15ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில்ல் படுகாயமடைந்த அவர் குருநாகல் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே 15 நாட்களுக்குப் பின்னர் நேற்று முன்திகம் (30) மரணமடைந்தார்.

சம்பவத்தில் புத்தளம் முள்ளிப்புரம் மீன்பிடி கிராமத்தில் வசிக்கும் மொஹமட் சிஹாம் (வயது 48) என்பவ​ரே மரணமடைந்துள்ளார்.

விபத்து
மொஹமட் சிஹாம் செலுத்திவந்த சிறிய ரக வாகனத்தை இராஜாங்க அமைச்சரின் வாகனம் புத்தளம் நகரத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், குருநாகல் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டார்.

அங்கு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிற்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor