இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய பட்டய நிறுவனம்

ரஷ்யாவின் மிகப்பெரிய பட்டய விமான நிறுவனம் கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கமைய ரஷ்யாவின் விமான நிறுவனமான அஸூர் நவம்பர் 2 ஆம் திகதி முதல் கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

10 நாட்களுக்கு ஒருமுறை சேவை

இந்த விமானம் சென் பீட்டர்ஸ்பேக், ரஸ்னோயாஸ்க் மற்றும் நொவோஸ்பிர்ஸ்க் ஆகிய இடங்களில் இருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஸூர் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மொஸ்கோவில் இருந்து வாரத்திற்கு இரண்டு முறை சேவையில் ஈடுபடும் என்று ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor