ஜனாதிபதியின் மனைவி பேராசிரியர் மைத்திரி யாழ். பல்கலைக்கு விஜயம்

பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தினை  நீண்ட வலுவாக தந்திரமான சக்தியினை உருவாக்க எதிர்காலத்தில் திட்ட நடைமுறைகள் வரையப்பட்டு வருகின்றது என ஜனாதிபதியின் பாரியார் மைத்திரி விக்கிரசிங்க தெரிவித்தார்.

தன்னிறைவு அடைந்து வரும் இலங்கையில்  தற்போதைய இரண்டு வருடகாலத்தில் கொரோனா தொற்று நிலைமை காரணமாக பாரிய பின்னடைவினை சகல துறைகளிலும் காணபட்டுள்ளன. எனவே அவ்வாறான நிலையினை திறம்படவாய்ப்பு இருக்கின்றது.அதுவும் எதிர்வரும் 03 வருடகாலப்பகுதி தேவையாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.

புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல்  ( Shaping  the Future in the New Normal)  என்ற தொனிப் பொருளில் நடாத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சர்வதேச ஆய்வு மாநாட்டு தொடரில், பல்கலைக்கழக பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையத்தினால்  “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாடு இன்று  கைலாசபதி கலையரங்கில்  நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையப் பணிப்பாளர் பேராசிரியர் சிவாணி சண்முகதாஸ் தலைமையில் இடம்பெறுகின்றது

இந்த ஆய்வு மநாட்டின் முதன்மை உரையாளராக இலங்கையின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்கே கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றினார்.

இதன் போது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்..மேலும் தெரிவிக்கையில்.. அவர் இதனை தெரிவித்தார்.. பொருளாதார ரீதியாக பண்புபற்ற வதிவிடங்களை உருவாக்க மனிதாபிமான உதவிகள் மேன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.. கடந்ததை பின்பற்றாது எதிர்காலத்தில்  வலுமையுள்ள சமூக கட்டமைப்பினை உருவாக்க சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது என்றார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக்கு வருகை தந்த முதல் பெண்மணியை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ் ஸ்ரீசற்குண ராஜா வரவேற்றுக்கொண்டார்.

பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல் தொடர்பான 24 ஆய்வுகட்டுரையும், 12 உபதலைப்புகளுடான ஆய்வுக் கட்டுரைகள் முன்மொழிவுகள் முன்னேடுக்கப்படயுள்ளன.

இதில் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல் நெறிப்படுத்தும், கொழும்பு,களனி,யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிபுரையாளர்கள், கல்வி புலமையாளர்கள்,மாணவர்கள்,மாணவிகள்,பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: webeditor