அரசிற்குள் பிளவுகள் இருப்பதாக வெளிவரும் தகவல்கள் உண்மையல்ல என தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் திலின சமரகோன் தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதாக அவர் கூறினார். பிரதமரின் தலைமையில் ஒரு தனிக்குழு இயங்குவதாக சித்தரித்து, அரசில் பிளவுகளை... Read more »
மின்னேரியா-பட்டோயா பாலம் அருகே இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து மற்றும் பாரவண்டி (டிப்பர்) மோதலில் குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் மதுரு ஓயாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து, பாரவண்டியுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் பேருந்து... Read more »
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையிலும், நீண்ட தூரப் பயணங்களை இலகுபடுத்தும் வகையிலும், இலங்கை ரயில்வே திணைக்களம் புதிய சிறப்பு ரயில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘எல்ல வீக்கெண்ட் எக்ஸ்பிரஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் சேவை, கொழும்புக்கும் பதுளைக்கும் இடையே வார இறுதி நாட்களில் இயக்கப்படும்.... Read more »
சுப்ரீம் செட் செயற்கைக்கோள் விவகாரம் தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரியவும், ஒரு அமைச்சரும் பாராளுமன்றத்தில் இருவேறு கருத்துக்களைத் தெரிவித்தமை பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறும் செயலாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டியுள்ளார். இந்த இருவரில் யார் உண்மையைக் கூறுகிறார்கள் என்பதை... Read more »
யாழ். தென்மராட்சி, கொடிகாமம் எழுதுமட்டுவாள் பகுதியில் இன்று காலை 8 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், உள் வீதியிலிருந்து ஏ9 வீதியில் ஏற முற்பட்ட மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து... Read more »
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) துணை நிறுவனமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் (SLFEA) உதவி முகாமையாளர் ஒருவர், 1,050,000 ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த... Read more »
இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் ஆகஸ்ட் 15 அன்று ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்த போதிலும், யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகக் கண்காட்சி, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 17... Read more »
நாட்டின் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில், 18 வயதுக்குட்பட்ட 32 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, 2024 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 53 சிறுமிகள் கர்ப்பம் தரித்திருந்தனர்.... Read more »
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அறுகுவெளி பகுதியல் சாவகச்சேரி பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான கேரளகஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ் மாவட்டத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்... Read more »
இன்று காலை 10:00. மணியளவில் உப தவிசாளர் சிவகுரு செல்வராசா தலமையில் இடம்பெற்றது பச்சிளைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றய தினம் திட்டமிட்ட நிலையில் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் சுகவீனம் காரணத்தால் வருகை தராத நிலையில் உப தவிசாளர் தலைமையில் சிறு நேரம்... Read more »

