யால தேசிய பூங்காவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள வீதிகள் திறப்பு.

யால தேசிய பூங்காவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீதிகளை இன்று (05) முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக யால தேசிய பூங்காவின் வீதி அமைப்பிற்கு... Read more »

இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு பரிசுத்தொகை அதிகரிப்பு.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டதை விட அதிகமான பரிசுத்தொகையை வழங்குவதாக பொலிசார் அறிவித்துள்ளனர். அதன் பிரகாரம் ,ரூபா 10 இலட்சமாக இருந்த பரிசுத்தொகை தற்பொழுது ரூபா 12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும்... Read more »
Ad Widget

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் தவறி விழுந்து மரணம்.

யாழில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் தவறி விழுந்து மரணித்துள்ளார். கோப்பாய் தெற்கைச் சேர்ந்த சாம்பசிவம் தங்கம்மா (வயது79)என்னும் வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபப் பெண் கோப்பாய் அஞ்சல் அலுவலகத்தில் உதவித்தொகை பெறுவதற்காக கடந்த (17.02)நடந்து சென்று வீடு... Read more »

நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்தத்தை கைவிட்டுள்ளது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்.

நாடளாவியரீதியில் இன்று(05.03) முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கைவிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. Read more »

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்றைய தினம்(04.03) வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கொக்குவில் பகுதியில் உள்ள கடை ஒன்றின் களஞ்சிய சாலைப் பொறுப்பாளராகப் பணி புரிந்து வரும் இளைஞர் ஒருவர் மீது,மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் இளைஞனின்... Read more »

இணைய பாதுகாப்புச் சட்டம் விரைவில் திருத்தப்படும்-பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டம், விரைவில் திருத்தப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று(04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதனை ஆராய்வதற்காக பாதுகாப்பு, ஊடகம் மற்றும் நீதி ஆகிய அமைச்சின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி,... Read more »

உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்போருக்கான விசேட அறிவித்தல்!

உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்போரிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைக் குறித்த திகதிக்குள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். எந்தவொரு... Read more »

இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும்-கலாநிதி பீட்டர் புரூவர்.

இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானி. பீட்டர் புருவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலே இன்று (04.03)செவ்வாய்... Read more »

மட்டக்களப்பில் மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல் !

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக மாணவியை கர்ப்பமாக்கிய அவரது 24 வயது காதலனும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் அவரை நேற்று (28)ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 7ம் திகதி... Read more »

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய மகளிர் வாரம் பிரகடனம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய மகளிர் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, 2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில், பெண்களின் ஆரோக்கியம், விழிப்புணர்வு, பாதுகாப்பு, அதிகாரமளித்தல் மற்றும் அவர்களின் தொழில்நுட்ப திறன்களை... Read more »