“டுப்பு டுப்புனு சுடுறீனங்களா? உண்மையான துவக்கா” பரிதாப நிலையில் இரணுவ வீரர்

இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து பகுதியளவில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் கடமையில் நின்ற இராணுவ வீரர் ஒருவரை கிண்டலடித்து காணொளி எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இது குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் யூட்டிபருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றது.... Read more »

‘புஷ்பா திரைப்படம் என்னை pan இந்தியா நடிகராக மாற்றவில்லை’

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் சுமார் 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது மட்டுமல்லாமல் இரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படமாகவும் இருந்தது. இதுவொரு pan இந்தியா திரைப்படம் என்பதோடு இதன் இரண்டாம் பாகமும் வரும் ஒகஸ்ட் 15ஆம் திகதி வெளிவரவிருக்கிறது. புஷ்பா 1... Read more »
Ad Widget

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பயணம் ஒத்திவைப்பு:

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் 322 நாட்கள் தங்கியிருக்கும் வேலைத்திட்டத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58), 3ஆவது முறையாக பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும், நேற்று செவ்வாய்க்கிழமை விண்வெளிக்குச் செல்லவிருந்த நிலையில், கடைசி நேரத்தில்... Read more »

“புலிகளை தோற்கடித்தவர்கள் கூலிப்படையாக செயற்படுகின்றனர்”: சவேந்திர சில்வா

வெளிநாடுகளில் கூலிப்படையாக இணைப்பதற்கு முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரங்களில் இருந்து விலகியிருக்குமாறு இலங்கை படை வீரர்களிடம் பாதுகாப்புப் படைகளின் பிரதானி (CDS) ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் – ரஷ்யப் போரில் இலங்கை இராணுவத்தின்... Read more »

டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு சட்டப்பூர்வ தகுதி எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது. சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது. பிரித்தானிய... Read more »

100 ஜிகாபைட்ஸ் வேகம்கொண்ட 6G: ஜப்பானில் அறிமுகம்

தொழில்நுட்பத்தில் புதுப்புது விடயங்களை அறிமுகப்படுத்துவதில் ஜப்பான் என்றுமே முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் இயங்கிவரும் டெலிகொம் நிறுவனங்கள் அனைத்தினதும் கூட்டு முயற்சியில் உலகின் முதல் 6ஜி சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் இந்த சாதனத்தை சோதனை செய்து பார்த்ததில் அதில் வெற்றியும்... Read more »

ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சனுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 30 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனின் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பு சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அபாரமாக துடுப்பெடுத்தாய... Read more »

நாடாளுமன்ற தேர்தல் பசில்: மாறுபட்ட நிலைப்பாட்டில் ரணில்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாப தலைவர் பசில் ராஜபக்ச இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாறுபட்ட நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம்... Read more »

யாழில் வெளிநாட்டு பணத்துடன் தவறவிடப்பட்ட பை: பேருந்து நடத்துனரின் நேர்மையான செயல்

வெளிநாட்டவர் ஒருவரின் பெரும் தொகை பணமடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து நடத்துனரின் நேர்மையான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சாலையில் நடத்துனராக கடமையாற்றும் B.பாலமயூரன் என்பவர் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி சேவைக் கடமையில் நேற்று ஈடுபட்டிருந்தார். குறித்த பேருந்தில்... Read more »

அமெரிக்காவில் 3 வயது மகனை சுட்டுக்கொன்று, தாய் தற்கொலை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் 32 வயதான சவான்னா கிரிகர். இவரது மகன் மூன்று வயதான கெய்தன். தனது மகனுடன் வசித்து வந்த கிரிகர், சான் ஆன்டனியோ பகுதியிலுள்ள ஒரு பூங்காவுக்கு சென்று, அங்கு தனது மகனை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை... Read more »