யாழில் தேர்தல் பணிகள் ஆரம்பம் : வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் தீவிரம்

நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக யாழ். மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து  அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது. யாழ்.மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் 4... Read more »

யாழ்ப்பாணத்தில் திடீர் மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாக செயற்பட்ட 12 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ம. பிரதீபன் அறிவித்துள்ளார். ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் வேலணை மத்திய கல்லூரி விடுதி வாக்களிப்பு நிலையம், சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலய நால்வர் மணிமண்டபத்துக்கும்,... Read more »
Ad Widget

நாளை தேர்தல் : வாக்காளர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நாளை (14 – 11 – 2024) நடைபெறவுள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், வாக்களிக்கத் தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 71 இலட்சத்து 40,354 ஆகும். நாடளாவிய ரீதியில் 13,421... Read more »

தேர்தல் தொடர்பில் இன்று விசேட ஒத்திகை

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் அனைத்து எழுதுப் பொருட்களும் இன்றைய நாள் முழுவதும் விநியோகிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம்... Read more »

இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் கோபிசங்கர்  

இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் கோபிசங்கர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் 2024 – 2025ஆம் ஆண்டுக்கான தலைவராக பதவியேற்றார். கோபி சங்கர் யாழ்ப்பாணம்... Read more »

ஆனையிறவு வீதித்தடை அகற்றப்பட்டது

கிளிநொச்சி – ஆனையிறவில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடை இன்று காலை அகற்றப்பட்டது. ஏ – 9 வீதியில் கிளிநொச்சி, ஆனையிறவு பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடையே அகற்றப்பட்டது. குறித்த பகுதியில் 17 வருடங்களாக காணப்பட்ட வீதித்தடை இன்று காலை அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Read more »

நானாட்டான் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்

மன்னார் – நானாட்டான் மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி வட மாகாண ஆளுநரிடம் இன்று மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. மன்னார் – நானாட்டான் மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி கால்நடை வளப்பாளர்கள் வட மாகாண ஆளுநர் நாகலிங்கன்... Read more »

சுன்னாகத்தில் அராஜகம்! நான்கு பொலிஸார் பணியிடை நீக்கம்!!

சுன்னாகத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என நால்வர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை,  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு விசேட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு... Read more »

தமிழ் மக்கள் சங்குக்கு வாக்களிக்க ஆர்வம் – சித்தார்த்தன் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கணிசமான மக்கள் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் – இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மாற்றத்தை பற்றி பலர்... Read more »

“முள்ளிவாய்க்காலின் இரத்தக்கறை தற்போதைய ஆட்சியாளர்களின் கைகளிலும் உள்ளது”

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது. அன்பிற்குரிய தமிழ் மக்களே! எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா தேசம் தமது ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் தேர்தலாக இது... Read more »