ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சேதம்: விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

வவுனியா – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விளைவிக்கப்பட்ட சேதம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த ஜனாதிபதி, தொல்பொருள் திணைக்களத்துடன் வவுனியாவிலும், கொழும்பிலும் இரண்டு சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும், இன்னும் அந்த பிரச்சினை தொடர்கிறது. வனபாதுகாப்பு... Read more »

முல்லைத்தீவு கொக்குதொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் காணிகள் அளவீடு

முல்லைத்தீவு மாவட்டத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எல்லையில் உள்ள தமிழ் கிராமமான கொக்குத்தொடுவாய் கிராமத்தின் தமிழ் மக்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை சுவீகரிக்கும் நோக்கோடு அளவீடுகளை செய்து காணிகளுக்கு நடுவே எல்லை கற்கள் நாட்டப்பட்டுள்ளதாக கொக்குத்தொடுவாய் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.... Read more »
Ad Widget

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தை புனரமைத்து தர கோரிக்கை!

முல்லைத்தீவு ஏ-35 வீதியில் விபத்துக்கள் ஏற்படும் வகையில் காணப்படும் வட்டுவாகல் பாலத்தினை புணரமைக்க இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பாலம் தொடர்ந்தும் ஆபத்தானதாக காணப்படுவதுடன் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான பாலம் முல்லைத்தீவு மாவட்டத்தின்... Read more »

விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 21 வயதான அபிஷன் என்ற மாணவன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் படித்த இவர் 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A எடுத்து புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தவர் என கூறப்படுகின்றது. அதேசமயம் இளைஞனின்... Read more »

முல்லைத்தீவு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை!

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் முத்துஐயன்கட்டு நீரேந்துப் பகுதியில் 116 மீமீ மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு அதிக மழைவீழ்ச்சி காரணமாக 24’00” கொள்ளளவுள்ள முத்துஐயன்கட்டு குளத்தின் நீர்மட்டம் 23’06” ஆகிய நிலையில் 4 வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனடிப்படையில்... Read more »

முல்லைத்தீவில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் கைது

முல்லைத்தீவில் 15 வயது சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் வாடி ஒன்றுக்கு பணிக்காக சென்றுள்ள திருகோணமலையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே நேற்று (3-01-23 ) கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

பரந்தனில் இ.போ.சவை வழிமறித்து தனியார்துறையினர் அட்டகாசம்!

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுக்கு இன்று அரச உத்தியோகத்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றை, பரந்தன் சந்தி பகுதியில் வைத்து தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இடை மறித்ததால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரச உத்தியோகத்தர்களை ஏற்றி வந்த அரச பேருந்தை ஏ 35 வீதியின் பரந்தன்... Read more »

முல்லைத்தீவில் மாணவனை கடுமையாக தாக்கும் ஆசிரியர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார். குறித்த ஆசிரியர் மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு கடுமையாக தாக்கும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் கண்மூடித்தனமாக மாணவர்களை தாக்கும் ஆசிரியர் தொடர்பில்... Read more »

முல்லைத்தீவில் சிசு ஒன்றின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

முல்லைத்தீவு- துணுக்காய் ஐயங்குளம் பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசு ஒன்றின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கால்நடை மேய்ப்பாளர்கள் வழங்கிய தகவலுக்கமைய நேற்று சிசுவின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட நீதவான் கெங்காதரன் சிசுவின் எச்சங்களை... Read more »

முல்லைத்தீவில் தொலைந்த தாலிக்கொடியை மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்த சம்பவம்

முல்லைத்தீவில் இளம் தம்பதியினால் தவறவிடப்பட்ட தாலிக்கொடி மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றுக்கு சென்ற தம்பதியின் தாலிக்கொடி கழுத்திலிருந்து தவறி வீழ்ந்துள்ளது. இந்நிலையைில் குறித்த பேக்கரியின் உரிமையாளரினால் மீட்கப்பட்ட தாலிக்கொடியை உரியவர்களிடம் ஒப்படைக்க... Read more »