கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் ஓன்று இன்றைய தினம்(10.01) வெள்ளிக்கிழமை மன்னார், மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சாரதாஞ்சலிமனோகரன் கலந்து கொண்டு... Read more »
மன்னார் சதொச மனிதப் புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் (9.01) வியாழக்கிழமை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. முதலில் மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன் போது பாதிக்கப்பட்டோர் சார்பில்... Read more »
மன்னார் மாவட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பரங்கிகமம் பகுதியில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் உணவுப் பண்பாட்டியல் தொடக்க விழாவான அறுவடை விழா இன்று(9) வியாழன் காலை 11:30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வானது கமக்கார அமைப்பின் உறுப்பினர்களால் பொங்கல் வைத்து... Read more »
யுத்த காலத்தில் மன்னார் மறைமாவட்டத்தில் அருட்பணியாளராக இருந்து பாதிப்படைந்த மக்களுக்கு வங்காலை பங்கிலிருந்து சேவையாற்றிக் கொண்டிருந்த அருட்பணியாளர் மேரி பஸ்ரியன் அடிகளார் அவரது வாசஸ்தலத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 40வது நினைவேந்தல் வங்காலை புனித ஆனாள் பங்கு மக்களால் இன்றைய தினம் (06.01)... Read more »
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,முருங்கன் பொலிஸாரினால் போதை மாத்திரைகளுடன் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் (04.01) சனிக்கிழமை முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 200 போதை மாத்திரைகளுடன் முருங்கன் பஜார்... Read more »
“மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது. நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின் நிற்கப் போவதில்லை. எனவே அரசஉத்தியோகத்தர்கள் மக்களுடன் அன்பாக நடந்து கொண்டு. அவர்களுக்கு உரியநேரத்தில் சிறப்பான முறையில் சேவையை வழங்க வேண்டும்.” என பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.... Read more »
மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தற்காலிகமாக நிறுத்த மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம். மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன் னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின்... Read more »
மன்னார் பிரதேச செயலகத்திற்கு ட்பட்ட தாழ்வுபாட்டு பகுதியில். காற்றாலைமின் திட்டத்தை. தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவே கடற்கரை வீதிபுனரமைக்கப்பட்டு வருவதாக. அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இன்று பிற்பகல் கடற்கரை வீதிக்கு வந்த மக்கள் வீதிப்புனரமைப்பில் ஈடுபட்டிருந்தவர்களுடன் வேலையை நிறுத்துமாறு தர்க்கத்தில் ஈடுபட்டனர். சம்பவத்தைக்... Read more »
மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலம் ஒன்றினை இன்று (30.12) திங்கள், காலை கடற்படையினர் மீட்டுள்ளனர். மீனவர்கள் கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்ட கடற்படையினர் சௌத்பார் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார்... Read more »
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி. கையெழுத்துப் போராட்டம் ஒன்று மன்னார் பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்பாக இன்று (30.12) திங்கட்கிழமை காலை இடம் பெற்றது.... Read more »

