தொடரும் இந்திய மீனவர்களின் கைது.

மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்றிரவு(06) கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன் அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கடற்றொழில்... Read more »

மன்னாரில் கனிய மண்ணகழ்வு தொடர்பான சுற்றுச்சூழல் குழுக் கூட்டம்.

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய மண்ணகழ்வு தொடர்பான மன்னார் மாவட்ட சுற்றாடல் அமுலாக்கள் குழு கூட்டம் நேற்றைய தினம் (06.03)வியாழக்கிழமை  மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில்  நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில்... Read more »
Ad Widget

தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு.

தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட குழுவினர், நேற்றைய தினம்(05.03)புதன் கிழமை மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது அப்பகுதி மக்களால் முன்வைக்கப்பட்ட குறைகளைக் கேட்டு அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் விரைவில் அவற்றை... Read more »

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட சிறிலங்கா சுதந்திரக்கட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை (6.3) மதியம் மன்னார் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என்.எம்.எம்.பாரீஸ் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்... Read more »

மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள்(video) .

மகா சிவராத்திரியை முன்னிட்டு பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக காணப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவாலயத்தில் நேற்றைய தினம் (26.02)புதன் கிழமை   விசேட பூஜை வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன. சிறப்பான முறையில் ஆறு சாம பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது ஆலய முன்றலில்... Read more »

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் மன்னார் விஜயம்(video) .

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் பெண்கள் பங்களிப்பு தொடர்பில் ஆராயும் நோக்கில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் நேற்றைய தினம்(26.02) மன்னாருக்கு வருகை தந்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் மன்னார் அலுவலகத்தில் மன்னார்... Read more »

இலங்கை கடற்பரப்பிற்குள் மீண்டும் 32 இந்திய மீனவர்கள் கைது.

இலங்கை கடற் பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 5 படகுகளுடன் 32 இந்திய மீனவர்கள் இன்றைய தினம்(23.02) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெஃப்டினன் புத்திக்க சம்பத் தெரிவித்துள்ளார் . கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம்... Read more »

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்.

இந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. எனவே மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு (டைட்டானியம்) கரையோர மண் அகழ்வு ஆகிய மூன்று திட்டங்களையும் முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கை.... Read more »

மன்னார் கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் கைது.

மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இன்று (20.02) வியாழன் அதிகாலை 4 இந்திய மீனவர்களை ஒரு மீன்பிடி படகுடன் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாடு ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர். வட... Read more »

மூன்றாவது முறையாகவும் திருப்பி அனுப்பப்பட்ட  கணியமண் அகழ்வாராய்ச்சியாளர்கள்.(Video) 

மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் இன்றைய தினம் (19.02) புதன்கிழமை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் கணிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல் ஆய்வினை மேற்கொள்ள வந்த 23 திணைக்களங்களைச் சேர்ந்தவர்கள் மக்களின் பாரிய எதிர்ப்பினால், அதனைக் கைவிட்டுப் பின்வாங்கிச் சென்றனர். கடந்த திங்கட்கிழமை... Read more »