இன்றைய தினம்(112.02) புதன்கிழமை மாலை, மன்னார் தாழ்வுபாடு வீதியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் மன்னார் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரனுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. இந்த கலந்துரையாடலில்... Read more »
மன்னார் பிரதேச சபை, நகரசபை பேசாலை பிரதேச சபை மற்றும் நானாட்டான் பிரதேச சபை, பெலகிகோஸ் நிறுவனம் ஆகியவற்றின். ஒத்துழைப்போடு. மன்னார் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினரால். இன்றைய தினம் (12.02) புதன் கிழமை காலை 6.00 மணி தொடக்கம் 11 மணி வரை வங்காலை... Read more »
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை(24-02-2025) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று (10.02) உத்தரவிட்டார். 7 சந்தேக... Read more »
‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் இன்று ச(4.02) செவ்வாய்க்கிழமை இலங்கை முழுவதும் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வானது இன்று(4) மன்னார் மாவட்ட செயலகத்தில்... Read more »
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகக் கொண்டுவரப்பட்ட பறவைகள், மற்றும், மருந்து பொருட்களுடன் மூன்று பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் கரிசல் பகுதியில் வைத்து, பறவைகள் மற்றும் மர அணில்களை வாகனத்தில் ஏற்றும் பொழுது இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கடற் படையினர்... Read more »
அரசாங்கம் நெல்லுக்கு அதிகூடிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இது வரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும்,பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் நெல்லுக்குரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம்... Read more »
மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரத்தினைப் பாதிக்கும் இந்த பாரிய திட்டங்களைத் தீவிற்குள் முன்னெடுக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோமென அருட்பணி மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று (29.01) புதன்கிழமை,காலை 9.30 மணியளவில் சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் CEJ நிறுவனத்தினருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்பு.... Read more »
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை(10-02) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று (29.01) புதன் கிழமை உத்தரவிட்டுள்ளார். அத்துடன்... Read more »
மன்னார் மாவட்டத்தின் நான்கு பிரதான பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்ட. பிரதி அமைச்சர் உப்பாலி சமரசிங்க.
இன்று (28.01) செவ்வாய் காலை. மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில். தலைமையேற்று கலந்துரையாடலில் ஈடுபட்ட பின், மன்னாரில் உள்ள நான்கு பிரதான பாடசாலைகளான,மன்/ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மற்றும் பெணகள் கல்லூரி, மன்,சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி,... Read more »
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் பிரதியமைச்சரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற... Read more »

