எல்லை தாண்டும் இந்திய ரோலர்கள்! தடுத்து நிறுத்த நிதி சேகரிக்கும் வடக்கு கடற்றொழிலாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களது அத்துமீறலைத் தடுத்து நிறுத்தும் வகையில் இந்தியாவிற்கு செல்லும் பேச்சுவார்த்தை குழுவின் பயணச் செலவிற்காக உண்டியல் குலுக்கி நிதி சேகரிக்கும் நடவடிக்கை இன்று (18-10-2023) பதன்கிழமை பருத்தித்துறை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.  ... Read more »

விவசாயிகளின் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும்:  விவசாய அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை 

வடக்கு மாகாண விவசாயிகளுக்கு அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சரிடம் ஆளுநர் கோரிக்கை முன்வைப்பு.   கடந்த 2023.10.15 அன்று யாழ் மாவட்ட செயலகத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் தொடர்பாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும்... Read more »
Ad Widget

வடக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை: ஆளுநர் உறுதி 

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் : ஆளுநர் உறுதியளிப்பு மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான சிறந்த திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலான கலந்துரையாடல்  17.10.2023 இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்... Read more »

பிறந்தநாள் கொண்டாடிய ஐவர் கைது!!!

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து... Read more »

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி களமிறங்கிய தமிழ்த் தேசிய கட்சிகள்

எதிர்வரும் 20 ஆம்  திகதி வடக்கு கிழக்கில் முழுமையாக நடைபெறவுள்ள பூரண கதவடைப்பு – ஹர்த்தால் போராட்டத்திற்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும் வடக்கின் பிரதான நகரங்களில் பிரசாரங்களில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பு... Read more »

ஹர்த்தாலுக்கு எதிராக யாழில் துண்டுபிரசுரம் விநியோகம்

எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களை முடக்கி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் குறித்த ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் தென்மராட்சி பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த துண்டு பிரசுரங்களானது தென்மராட்சி மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பினால்... Read more »

வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால்

எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு – கிழக்கில் பூரண ஹர்த்தால் நடைபெறவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இணைந்து தெரிவித்துள்ளனர். யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இதன்படி, வடக்கு –... Read more »

யாழில் இருந்து சுவிஸ் சென்ற யுவதிக்கு நேர்ந்த சோகம்

யாழ்ப்பாணத்தில் உள்ள 19 வயதான யுவதி ஒருவரை சுவிட்சர்லாந்தில் உள்ள நபருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் மாமனாரின் கொடுமையால் யுவதி 3 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த யுவதியின்... Read more »

யாழ் இராணுவ மேயரின் திருவிளையாடல் அம்பலம்!

அமெரிக்காவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி யாழ்ப்பாணம், எழுதுமட்டுவாழில் உள்ள முகாமில் பணிபுரியும் இராணுவ மேஜரும், மனைவியும் சுமார் 42 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மோசடி தொடர்பில் , பாணந்துறை கோரகன கிராமத்தைச் சேர்ந்த இராணுவ மேயரின் மனைவியான 46... Read more »

யாழில் அதிசக்தி வாய்ந்த பொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 01 கிலோவுக்கும் அதிகமான TNT என்ற அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று (17) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சூட்சமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உள்ள ஜெட்டிக்கு... Read more »