கடும் எதிர்ப்பை தொடர்ந்து கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டு பணிகள் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் அளவீட்டு பணிகள் கைவிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்று அளவீடுகள் செய்வதற்கு நில அளவை திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு வருகை... Read more »

யாழ். ஜனாதிபதி மாளிகையை கையகப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் அளவீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்றைய தினம் (15) கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீடு செய்யப்படவுள்ளதாக ஏற்னகவே நில அளவைத் திணைக்களத்தின் நில அளவையாளரால் முன் கூட்டிய... Read more »
Ad Widget

யாழில் மூன்று நாட்டு தூதுவர்கள்

சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விஜயம் செய்தனர். சுவிட்சர்லாந்தின் தூதுவர் சிறி வால்ட், ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி மற்றும் தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் சடைல் ஷால்க் ஆகியோர் பலாலியில் அமைந்துள்ள... Read more »

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஆறுபேரையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் நீரியல் வளத் திணைக்களத்திற்கு... Read more »

நாணய நிதியக் கடன் மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும்

நாணய நிதியக் கடன் அரசுக்கு சந்தோஷம்! சாதாரண மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும்!! வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கடன் கிடைப்பதை மிக சந்தோஷமாக வரவேற்கும் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படப் போகும் நெருக்கடிகள் தொடர்பில் கவலைப்படவில்லை.... Read more »

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- கிராம மட்ட கலந்துரையாடல்கள் ஊடாக பொதுமக்களை தெளிவுபடுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அறிவிப்பு. வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, மாகாணத்தின் டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் போது... Read more »

யாழ் அதிபர் மீதான தாக்குதலுக்கு நீதி வேண்டும் ஆசிரியர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் மல்லாகம் மகா வித்தியாலய ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் நவம்பர் 27ஆம் திகதி கொக்குவிலில் உள்ள மல்லாகம் மகா வித்தியாலய அதிபரின் வீட்டில் நுழைந்து இனந்தெரியாத நபர்களால் நடாத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டது. பாடசாலைக்கு... Read more »

யாழில் ஒரே நாளில் உயிரிழந்த இரு முதியவர்கள்!

யாழ்ப்பாணத்தில், நேற்று புதன்கிழமை (13) இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து விட்டு , கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் சங்கானை பிரதேச... Read more »

இந்திய மீனவர்கள் அறுவர் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே நேற்று மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை... Read more »

சாவகச்சேரியில் கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கிளிநொச்சி பகுதியில் இருந்து கேரளா கஞ்சாவை கடத்தி வருவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கமைய சாவகச்சேரியில் பொலிஸாருடன் இராணுவ... Read more »