யாழ்.பல்கலை முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பில் அசமந்தமான போக்கினை உடன் நிறுத்தி, தரமான சேவையை மக்களுக்கு வழங்க, இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கு என கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப்... Read more »

யாழ் மீசாலையில் சொகுசு பஸ் மோதி ஒருவர் மரணம்.

A9 வீதி யாழ் மீசாலைப்பகுதியில் இபோச சபை பேரூந்தை சொகுசு பேருந்து முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியதில் மோட்டார்சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. Read more »
Ad Widget

விமான நிலையத்தில் பிடிபட்ட கனடா விசிட் விசா

நிர்மலன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் வெளிநாட்டு கனவில் திரிந்து வந்த நிலையில் தற்போது பரவலாக வழங்கப்பட்டு வரும் கனடா விசிட் விசாவை பயன்படுத்தி கனடா செல்ல திட்டமிட்டார். அதற்கு வசதியாக அவரின் தாயாரின் ஒன்றுவிட்ட சகோதரியின் மகளின் குடும்பம் கனடாவில் வசித்து... Read more »

யாழில் கனடா அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த போலி ஊடகவியலாளர் கைது

யாழில் தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக்கொண்டு கனடா அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை  (24) மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “கனடாவில் தென்னிந்திய இசையமைப்பாளரின் மாபெரும் இசை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும் அதற்காக... Read more »

கஞ்சாவுடன் கைதான மூவரை தடுத்து விசாரிக்க அனுமதி

யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கடற்படையை சேர்ந்த இருவர் உட்பட மூவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்... Read more »

யாழ் நகரில் இருந்து கொழும்புக்கு வந்தவர் கடத்தப்பட்டு கொள்ளை

யாழ்ப்பாணத்தில் இருந்து தனது மனைவியுடன் கொழும்புக்குச் சிகிச்சைக்காக வருகைதந்த குடும்பஸ்த்தர் ஒருவர் கடத்தப்பட்டு கைவிரலில் போடப்பட்டிருந்த இருந்த தங்க மோதிரம் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர் வேறு யாருமல்ல. கொழும்பில் இருந்து வெளிவரும் தினக்குரல் நாளிதழில் ஒப்புநோக்குநராகப் பணியாற்றிப் பின்னர்... Read more »

வலி.வடக்கில் 234 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த மக்களின் 234 ஏக்கர் காணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விடுவிக்கப்பட்டது. மக்களின் காணிகள் கையளிக்கும் நிகழ்வு அச்சுவேலி வயாவிளான் பகுதி ரெயிலர் கடை சந்திப் பகுதியில் இன்று இடம்பெற்றது. அதற்கமைய ஜே- 244 வயாவிளான் கிழக்கு... Read more »

கடற்றொழிலாளர்களது உண்ணாவிரதப் போராட்டமம் வெற்றி – டக்ளஸ்

வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் – உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு! வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னெடுத்தவரும் உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது... Read more »

சர்வதேச காடுகள் தினம் யாழ் அரசடி சித்தி விநாயகர் முன்பள்ளியில்

காடுகள் மற்றும் புதுமை என்னும் கருப்பொருளில் சர்வதேச காடுகள் தினம் யாழ் அரசடி சித்தி விநாயகர் முன்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கொண்டாட்டம். இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் திரு ம. .சசிகரன் கலந்து... Read more »

பொலிஸ்மா அதிபர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மீது கஜேந்திரன் குற்றச்சாட்டு

வெடுக்குமாறிமலை ஆதிலிங்க ஐய்யனார் கோயிலை திட்டமிட்டு சிங்களமயமாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அதன் காரணமாகவே வழிபாட்டில் ஈடுபட செல்லும் தமிழர்கள் மீதான வன்முறைகளை பாதுகாப்பு படையினர் கட்டவிழ்த்து விடுகின்றனர் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு... Read more »