பணத்திற்கு ஆசைப்பட்டு மனைவியை கொன்ற கணவன்

கோடி ரூபா காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்வதற்காக 40 வயதுடைய மனைவியைக் கொன்ற 25 வயதுடைய நபரை பிடிகல பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் குறித்த இளைஞன் தனது நண்பரைப் பயன்படுத்தி குறித்த பெண்ணை வாகன விபத்தில் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிடிகல... Read more »

இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் ID வழங்க இந்தியா உதவி!

அதிநவீன முறையிலான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க, இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது சாத்தியக்கூறு மட்டத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. சாகல ரத்நாயக்க – கோபால் பாக்லே சந்திப்பு அதற்கமைவாக புதிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான... Read more »
Ad Widget

இலங்கையில் கீரிச் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு!

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக நாட்டிலுள்ள மில் உரிமையாளர்கள் அரசியின் கட்டுப்பாட்டு விலையை மீறி கீரி சம்பாவை விற்பனை செய்வதால் கீரி... Read more »

எரிபொருள் விலை மேலும் குறைவடையும் சாத்தியம்

எரிபொருள் விலைகள் மேலும் குறைவடைவதுடன் , விரைவில் மின் கட்டணத்தில் சலுகைகளும் மக்களுக்கும் வழங்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், சீன, அவுஸ்திரேலிய மற்றும் அமெரிக்க... Read more »

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை(08.05.2023) மேலும் பத்து விடைத்தாள் மதிப்பீட்டு நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார். விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை 2022ஆம்... Read more »

பிரான்சில் மாயமான ஈழத்தமிழர் கண்டுபிடிப்பு!

பிரான்ஸில் பாரிஸில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரீஸ் சங்கீதா அச்சக உரிமையாளரே இவ்வாறு கடந்த சில நாட்களாக காணாமல் போனதாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.... Read more »

யாழில் மயக்க மருந்து வீசி கொள்ளை!

யாழ்.ஏழாலை பகுதியில் வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த கொள்ளைக் கும்பல் சுமார் 15 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அதிகாலை வேளை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிய நிலையில் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து கொள்ளையர்கள்... Read more »

இலங்கை மக்களை ஏமாற்றும் மோசடி கும்பல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் மக்களை இலக்கு வைத்து இடம்பெறும் நூதன மோசடி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. நபர் ஒருவர் நீண்ட காலமாக மக்களின் அனுதாபங்களை பெற்று தமக்கான வருமானத்தை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகிறார். சனநெரிசல் உள்ள பகுதிகள், வாகன நெரிசலுள்ள பகுதிகளில் அரிசியை திட்டமிட்டு... Read more »

இலங்கையின் சுற்றுலாத்துறை தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

2023ஆம் ஆண்டு 20 இலட்சம் இந்தியச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (05.05.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்... Read more »

வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் (06.05.2023) மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை... Read more »