இந்த வருடம் நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை விரைவில் 9 இலட்சத்தை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் முதல் 27 நாட்களில் மாத்திரம் 8 இலட்சத்து 91 ஆயிரத்து 188 பேர் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த... Read more »
இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 29) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 317.8342 ஆக பதிவாகியுள்ளது. டொலரின் விற்பனை விலை ரூபா 329.5445 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்... Read more »
கொழும்பில் பெண் ஒருவரை கேலி செய்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை இளைஞரை மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராண்ட்பாஸ் ,நவகம்புர பகுதியைச் சேர்ந்த 21... Read more »
இலங்கையில் 2023ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2009 ம் ஆண்டிற்கு பின்னர் 2023 ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியிலேயே எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது 15 முதல்... Read more »
அநுரகுமார திஸாநாயக்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக தாம் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்தோடு நேற்று இடம்பெற்ற நிறைவேற்று குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர... Read more »
ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவத்தை தேவாலயத்திற்கு அருகில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுரைச்சோலை பொலிஸார் சந்தேக நபரை நேற்று (28) கைது செய்துள்ளனர். சேதபொல, மாமிரிய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 26ஆம்... Read more »
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் இருந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 40 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் பத்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி... Read more »
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5, 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ளார். ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு... Read more »
ரயில் பாதையில் கைப்பேசியில் பேசிக்கொண்டு நடந்து சென்ற யுவதி ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது. பாணந்துறைக்கும் பின்வத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று (28) இரவு 07:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் படுகாயமடைந்த யுவதி... Read more »
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக் கப்பல் ஒன்றின் வருகையை அனுமதிக்குமாறு சீனாவின் புதிய கோரிக்கையை இலங்கை வெளியுறவு அமைச்சு பரிசீலித்து வரும் வேளையில் இந்த இரண்டு நாள் விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

