காணாமல் ஆக்கப்பட்டவர்கள்: ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கருத்து

காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் விதி மற்றும் அவர்களின் இருப்பிடத்தை வெளிப்படுத்தவும், அந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டிக்கவும் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும்... Read more »

அமெரிக்காவின் காலனியாக மாறுகின்றதா இலங்கை?

அமெரிக்காவின் நலன் கருதியே ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தனது கட்சியின் தலைமையகத்தில் நேற்று (16.05.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்... Read more »
Ad Widget

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயார்: மஹிந்த

பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரி, ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் சரி எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் : குற்றத்தை ஒப்புக்கொண்ட இராஜாங்க அமைச்சர்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகளை எடுத்துச் செல்லும் பணியாளர் ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரண்வீர தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அவர் விமானநிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் பலரை அச்சுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரண்வீர தமது மனைவியை... Read more »

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க சாத்தியமில்லை – ஜி.எல்.பீரிஸ்

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். Read more »

பொதுத் தேர்தலை நடாத்துவது குறித்து சபாநாயாகரின் அறிவிப்பு

நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இன்று வியாழக்கிழமை(16) இதனை தெரிவித்தார். நாடு சிறந்த நிலையை அடைந்ததன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும்... Read more »

ஜெனிவா தீர்மானங்களினாலும் பயனற்றுப் போயுள்ள நீதி: அமெரிக்க தூதுவரிடம் சிறீதரன்

அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், த.சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து ஆலோசித்துக் கொண்டிருப்பதாக,... Read more »

‘கைதானவர்கள் பிணையில் விடுதலையாவர்’ ரணில் : நினைவேந்தால் கேள்விக்குப் பதில் இல்லை என்கிறார் மனோ

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக ஜனாதிபதியுடன் தான் உரையாடிய விடயங்கள் தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், “நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை. மேலும், தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி... Read more »

தேசிக்காயின் விலை மூவாயிரம் ரூபாயாக அதிகரிப்பு

இலங்கையில் தேசிக்காய் கிலோ ஒன்றின் விலை மூவாயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. தம்புள்ளை உள்ளிட்ட பகுதியில் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில் இருந்து தேசிக்காய் விநியோகிக்கப்படுவதுடன், போதியளவு தேசிக்காய் கிடைக்காத காரணத்தினால் மொத்த மற்றும் சில்லறை... Read more »

யுத்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தனி நாடு உறுதி: சரத் வீரசேகர

யுத்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தனிநாட்டுக் கோசம் வெற்றிபெற்று விடும் என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், ஐ.நா சபையின் உயர்ஸ்தானிகர், இந்த சாட்சியங்களை அடிப்படையாகக்... Read more »