‘கைதானவர்கள் பிணையில் விடுதலையாவர்’ ரணில் : நினைவேந்தால் கேள்விக்குப் பதில் இல்லை என்கிறார் மனோ

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக ஜனாதிபதியுடன் தான் உரையாடிய விடயங்கள் தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், “நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை. மேலும், தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி... Read more »

தேசிக்காயின் விலை மூவாயிரம் ரூபாயாக அதிகரிப்பு

இலங்கையில் தேசிக்காய் கிலோ ஒன்றின் விலை மூவாயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. தம்புள்ளை உள்ளிட்ட பகுதியில் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில் இருந்து தேசிக்காய் விநியோகிக்கப்படுவதுடன், போதியளவு தேசிக்காய் கிடைக்காத காரணத்தினால் மொத்த மற்றும் சில்லறை... Read more »
Ad Widget

யுத்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தனி நாடு உறுதி: சரத் வீரசேகர

யுத்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தனிநாட்டுக் கோசம் வெற்றிபெற்று விடும் என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், ஐ.நா சபையின் உயர்ஸ்தானிகர், இந்த சாட்சியங்களை அடிப்படையாகக்... Read more »

24 மணித்தியாலத்தில் 7 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள், 16 வயதுக்குட்பட்ட ஏழு பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த பாடசாலை மாணவிகள் 12,14,10 மற்றும் 15 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் , மனம்பிட்டிய, மாங்குளம், இரத்தினபுரி, வெல்லம்பிட்டிய,... Read more »

சொல்வதை கேட்காமல் TIKTOKகில் வீடியோ போட்ட மனைவி: கணவன் வைத்தியசாலையில்

நீர்கொழும்பு – படல்கம பகுதியில் ஒரு தொகை வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் பாதிக்கப்பட்ட நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. படல்கம – காசிவத்த பகுதியில் வசிக்கும் குறித்த நபரின்... Read more »

“தமிழீழம் உருவாகியிருந்தால் அது இஸ்ரேலாக மாறியிருக்கும்”

தமிழீழம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் தென்னிலங்கை தற்போதைய பாலஸ்தீனமாக மாறியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாலஸ்தீன பிரச்சினை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை நேற்றுச் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்டது. குறித்த பிரேரணை மீதான விவாதத்தின் போது அவர் இவ்வாறு... Read more »

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?

அவசரமாக நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஆயத்தங்கள் எதுவும் இல்லை என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது தொடர்பில் அரசாங்கத் தரப்பிலிருந்து உத்தியோபூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. இந்த வார இறுதியில் நாடாளுமன்றத்தைக் கலைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. நாடாளுமன்றத்தை கலைப்பது... Read more »

பாலஸ்தீனியர்களுக்கு ஒரு நியாயம், தமிழர்களுக்கு ஒரு நியாயமா? சுமந்திரன் குற்றச்சாட்டு

உள்நாட்டு போரின் போது தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் இலங்கை அரசாங்கம் நயவசஞ்கத்துடன் செயறப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். பாலஸ்தீனத்தின் மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை தொடர்பில் அக்கறை காட்டும் இலங்கை அரசாங்கம், அந்த அக்கறையை... Read more »

ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை கையாளும் அமெரிக்கர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரசார நடவடிக்கைகளை கையாள்வதற்காக அமெரிக்க குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக கூறப்படுவதனை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளைக் கையாள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட அமைப்பாளர் லசந்த... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரத்துசெய்வதற்கு அரசாங்கம் திட்டம்

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் செல்லுபடியற்றதா என்பதை ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி பிரதமருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன... Read more »