கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இரத்து

கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இரத்த பலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் காரணமாக அவுஸ்திரேலியாவின் வணிக வளாகங்களில் வழக்கமாக நடைபெறும் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது, அவுஸ்திரேலிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் பலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருவதை கண்டிக்கும்... Read more »

திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு கார்

திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு கார் பத்தரமுல்லயிலிருந்து கொஸ்வத்த நோக்கிப் பயணித்த சொகுசு காரொன்று இன்று (22) திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீவிபத்தின்போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லையெனவும், கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ... Read more »
Ad Widget

ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) நான்காவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது. ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி கல்விசாரா ஊழியர்கள் கடந்த 19ஆம் திகதி இந்தப் பணிப்புறக்கணிப்பை... Read more »

உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் வரும் வாரத்தில் குறைந்த... Read more »

70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கு கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை, அந்த குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது. நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முதியோர் கொடுப்பனவு... Read more »

பாடசாலை விடுமுறைகள் இன்று தொடங்கி, ஜனவரி 02 வரை

2024 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் (22) முடிவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் 12.13,... Read more »

ஹரின் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (22) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் தரமற்ற மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த... Read more »

இன்றைய வானிலை!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிற்கு மேலாக நாளையளவில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இதன் பிற்பாடு இது தொடர்ந்து வரும் அடுத்த இரண்டு நாட்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும். இந்த தாழ் அமுக்கமானது மேலும்... Read more »

ரயில் சேவைகள் தாமதம் !

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் இன்று வெள்ளிக்கிழமை (22) தாமதமடைந்துள்ளன.   புஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் காலியிலிருந்து கல்கிசை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் ஒன்றிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. Read more »

காலியில் 500 கோடி ரூபாய் மதிப்பில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது!

500 கோடி ரூபாவுக்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 200 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் காலி மாபலகம பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேகத்தின் பேரில் 10 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 18ஆம்... Read more »