முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் உறுப்பினர்: வர்த்மானி வெளியீடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீமின் பெயரை உள்ளடக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் குறித்த வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை... Read more »

சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு

இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு அறிவித்துள்ளது. இந்த இணக்கப்பாட்டு ஒப்பந்தம் நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையும் முகாமைத்துவமும் அங்கீகரித்ததன் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் நான்காம் கட்ட கடன் வழங்கப்படும்... Read more »
Ad Widget

அரிசி மாபியா ஆட்டம் முடிந்தது! இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி.

இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை விவசாய அமைச்சும் வர்த்தக அமைச்சும் இணைந்து சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தா குறிப்பிடுகிறார். நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். நெல்... Read more »

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பேராசிரியர் கோமிக உடுகமசூரிய நியமனம்.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாக இருந்த கோமிகா, அமெரிக்காவின் அரசுப் பணியில் இருந்து விலகிய பிறகு இந்த நிலையை தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டுள்ளார். ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய மற்றும் MD ஆண்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின்... Read more »

அரச தடைகள் இல்லை… எதிர்ப்புகள் இல்லை… வடக்கில் மாவீரர் வாரம் ஆரம்பம்!

அரச தடைகள் இல்லை… எதிர்ப்புகள் இல்லை… வடக்கில் மாவீரர் வாரம் ஆரம்பம்! யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் மாவீரர் வாரம் ஆரம்பமாகி 21ஆம் திகதி மாலை அப்பகுதிகளில் அமைந்துள்ள சமாதிகளில் மலர்கள் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி தீபமேற்றப்பட்டது. பிரதான மாவீரர் வைபவம் யாழ்ப்பாணம்... Read more »

தேசப்பந்துக்கு எதிராக ஹரினியின் மனு

முன்னாள் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் நேற்று (22.11.2024) உத்தரவிட்டுள்ளது. 2023இல் கொழும்பின் பொல்துவவில் இடம்பெற்ற அமைதியான போராட்டத்தின்போது,... Read more »

அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ள சதொச நிறுவனம்!

இலங்கை சதொச நிறுவனம் அரிசியை விற்றபனை செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, சதொச நிறுவனம் ஒரு வாடிக்கையாளருக்கு பத்து கிலோ நாட்டு அரிசி மற்றும் கெக்குலு அரிசியை மட்டுமே வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1888 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி அநுர கருணாதிலக்க ஆகியோர் தலைமையில் நேற்றையதினம் (22.11.2024) இந்த கைச்சாத்தாகிடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த வீடுகள்... Read more »

தமிழரசு கட்சியின் பேச்சாளராக ஸ்ரீநேசன் நியமனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுப் பேச்சாளராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் நியமிக்கப்பட்டுள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு நேற்று நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் கூடியது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்... Read more »

தோல்விகளில் இருந்து முன்னோக்கிச் செல்வோம்: சஜித் சபதம்

“தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குரிய அரசியல் பயணம் தொடரும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “உண்மை மற்றும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, மக்கள் ஆணையை ஏற்று, மக்கள்... Read more »