ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட 20 ஆண்டுகள் அனுபவம் கட்டாயம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பது தொடர்பான வழிகாட்டல்களில் திருத்தங்களை மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக, ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமாநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, உரிய சட்டத்தரணி குறைந்தபட்சம் 20 வருடங்களாவது உயர்... Read more »

ஜனாதிபதி தங்காத மாளிகைகளுக்கு கோடிக்கணக்கில் செலவு – தேசிய தணிக்கை அறிக்கை வெளியீடு

2025 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள எந்தவொரு ஜனாதிபதி மாளிகையிலும் ஜனாதிபதி தங்கியிருக்கவில்லை என தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கொழும்பு, கண்டி, அனுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்டை ஆகிய 7 ஜனாதிபதி மாளிகைகளில் மொத்தம் 3,089 பேர் தங்கியிருந்ததாக அறிக்கையில்... Read more »
Ad Widget

மிருகக்காட்சிசாலை ஊழியராக இருந்து போதைப்பொருள் கடத்தியவருக்கு ஆயுள் தண்டனை

துபாயில் தலைமறைவாக உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ‘சுவா சமந்தா’வின் பிரதான உதவியாளரான நாளக்க புஷ்பகுமார என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பணியாற்றி வந்த சந்தேகநபர், அவ்வேலையின் போர்வையிலேயே போதைப்பொருள் கடத்தலை முன்னெடுத்து வந்துள்ளார். பொலிஸ்... Read more »

உலகின் சிறந்த 50 சுற்றுலா இடங்களில் இலங்கையின் ‘தொட்டலகல’ சொகுசு விடுதி!

இலங்கையின் ஹப்புத்தளையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தொட்டலகல’ (Thotalagala) சொகுசு விடுதி, சர்வதேச அளவில் பெருமைக்குரிய ‘World’s 50 Best Discovery’ பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இடம்பிடித்துள்ளது. ‘Island Life – Sri Lanka’ நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்த விடுதி, உலகப் புகழ்பெற்ற லிப்டன் சீட்... Read more »

விதிமுறைகளை மீறிய ஜனசக்தி ஃபைனான்ஸுக்கு 1 மில்லியன் ரூபா அபராதம்!

புதிய வாடிக்கையாளர்களை முறையாகச் சரிபார்க்கத் தவறிய ஜனசக்தி ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு இலங்கை நிதியியல் புலனாய்வுப் பிரிவு (FIU) ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தடைப்பட்டியலில் உள்ளவர்களுடன் புதிய வணிகத் தொடர்புகள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதில் தாமதம் காட்டியமையால்... Read more »

இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 புதிய சொகுசு பஸ்களைக் கொள்வனவு செய்ய தீர்மானம்!

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூரப்பயண சேவைகளுக்காக முன்னதாகக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டிருந்த சாதாரண (Standard) ரகத்தைச் சேர்ந்த 600 பஸ்களுக்குப் பதிலாக, மேலதிக வசதிகள் கொண்ட புதிய குளிரூட்டப்பட்ட (Deluxe) 600 பஸ்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல்... Read more »

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான கைது பிடியாணை மீண்டும் நீடிப்பு

மாத்தறையில் 60 மில்லியன் ரூபா பெறுமதியான காணியைக் கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் இரண்டாவது முறையாகவும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான கைது பிடியாணையை மாத்தறை தலைமை நீதவான் சதுர திஸாநாயக்க இன்று (21) மீண்டும் நீடித்துள்ளார். மாத்தறை,... Read more »

சீனப் பிரஜையிடம் ரூ. 2 கோடி கொள்ளை

சீனப் பிரஜையிடம் ரூ. 2 கோடி கொள்ளை: முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது! சீனப் பிரஜை ஒருவரிடமிருந்த சுமார் 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால்... Read more »

திடீர் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பான பொலிஸ் அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தல்

திடீரென அதிக சொத்து சேர்த்தவர்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் குறித்துத் தகவல் அளிக்குமாறு ஜூலை 9 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையைத் திரும்பப் பெறுமாறு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இலங்கை பொலிஸாரைக் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் சொத்து வரி இல்லாத நிலையில், வெளிநாட்டு... Read more »

சாரதியின் கவனயீனத்தால் பறிபோன 6 வயது மாணவியின் உயிர்

மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது மாணவி ஒருவர் பேருந்திலிருந்து கீழே தவறி விழுந்து பின், அதே சில்லுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது. (21) தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் பேருந்து நிலையத்திற்கு வந்து, பாடசாலைக்கு... Read more »