முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு அரசால் வழங்கிய பணம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பணம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கோட்டாபயவுக்கு அரசாங்கத்தினால் 19 வாகனங்களும், உணவு, பானங்கள் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதாந்தம் 950,000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் பந்துல குணவர்தன... Read more »

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசு வெளியிட்டுள்ள மகிழ்வான செய்தி!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிதி நிவாரணத்தை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட சமூகத்தில் இடர்களுக்கு ஆளாகக்கூடிய குடும்பங்களுக்கு 2023 ஆம் ஆண்டில் முதல் நான்கு மாதங்களுக்கு நிதிச் சலுகை வழங்குவதற்கும் 2023 ஆம் ஆண்டின் வரவு... Read more »
Ad Widget

அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் பாரிய சிக்கல்!

வரலாற்றிலேயே முதல் தடவையாக அரச ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளத்தை குறிப்பிட்ட தினத்துக்குள் செலுத்த முடியாது போயுள்ளதாகவும் நிறைவேற்று அதிகாரம் அல்லாத ஊழியர்களின் சம்பளத்தை குறிப்பிட்ட தினத்தில் செலுத்துவதற்கு திட்டமிட்டிருந்த போதிலும் நிறைவேற்று அதிகாரிகளின் சம்பளத்தை செலுத்துவதற்கு தாமதமாகியுள்ளதாக போக்குவரத்து, பெருந்தெருக்கள் அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான... Read more »

வசந்த முதலிகே தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார். அன்றைய தினம் சந்தேகநபரின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு... Read more »

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிப்பு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு... Read more »

இந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்கு கிடைக்கும்!

இந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப்பெறும் என்று அரசாங்கம் மீண்டும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றில் உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மார்ச் மாதத்துக்துக்கு... Read more »

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது!

ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்ததாக கூறப்படும் இரண்டு கடற்தொழில் படகுகளை இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் இதன்போது சந்தேகத்தின் பேரில் 10 பேர் நேற்று (16.01.2023) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த படகுகள் கடலில் தடுத்து வைக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள்... Read more »

நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு உயர்வு!

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 2022 டிசம்பர் மாத இறுதியில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 1896 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது. கடந்த 2022 நவம்பர் மாத இறுதியில் 1806 மில்லியன் டொலர்களாக காணப்பட்டது. டிசம்பரில் டொலர் கையிருப்பு உயர்வு... Read more »

யாழில் வாகன விபத்தில் சிக்குண்ட 27 வயது இளைஞன் உயிரிழப்பு!

யாழ். காங்கேசன்துறை மாவிட்டபுரம் பகுதியில் வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (16.01.2023) பதிவாகியுள்ளது. யாழ். மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான தா.தினேஷ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். வாகன சாரதி கைது இந்நிலையில் பட்டா வாகனமும்... Read more »

கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

கொழும்பு – 7 பகுதியிலிருந்து இன்று பிற்பகல் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குதிரை பந்தய திடலிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கழுத்தில் ஆழமான காயங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் ஆழமான வெட்டுக்... Read more »