யாழில் வாகன விபத்தில் சிக்குண்ட 27 வயது இளைஞன் உயிரிழப்பு!

யாழ். காங்கேசன்துறை மாவிட்டபுரம் பகுதியில் வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்று (16.01.2023) பதிவாகியுள்ளது.

யாழ். மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான தா.தினேஷ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

வாகன சாரதி கைது
இந்நிலையில் பட்டா வாகனமும் துவிச்சக்கர வண்டியும் மோதியதிலேயே இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பட்டா வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக காங்கேசன்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor