யாழில் ஒருவருக்கு ஒருவர் கத்தியால் வெட்டிக் கொண்ட கணவன் மனைவி!

யாழ்ப்பாணம் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்சினை வாய் தர்க்கமாக மாறியதில் கணவன் மனைவியை வெட்டியுள்ளார். அதே கத்தியினை பறித்த மனைவி கணவனை வெட்டியுள்ளார். இருவரும் வெட்டு காயங்களுக்கு உள்ளான... Read more »

யாழில் போதைப்பொருள் விற்ப்பனையில் ஈடுபட்ட வைத்தியர்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உயிர்கொல்லி போதைமருந்து பாவனை அதிகரித்துள்ள நிலையில், மருந்து விற்பனை நிலையங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது பிரதான மருந்தகங்களிலிருந்து அதிகளவான உயிர்கொல்லி போதை மாத்திரைகளை இரண்டு மருத்துவர்கள் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது. உயிர்கொல்லி போதை... Read more »
Ad Widget

இலங்கை சுற்றுலாத்துறை மேற்கொள்ளும் மற்றுமோர் திட்டம்!

தெற்காசியாவின் முதல் டிஸ்னிலேண்டை ஹம்பாந்தோட்டையில் திறப்பது குறித்து ஆலோசிக்க டிஸ்னிலேண்டின் குழு நவம்பர் மாதம் இலங்கைக்கு வருகைதர ஒப்புக்கொண்டுள்ளது. சுற்றுலாத்துறையின் திட்டம் சுற்றுலாத்துறையின் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் வேல்ட் டிஸ்னியின் அழைப்பைத் தொடர்ந்து 18 பில்லியன் அமெரிக்க டொலர்... Read more »

வீதியால் தனிமையில் சென்ற மூதாட்டியிடம் வழிப்பறி!

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் தனிமையில் சென்ற நபரிடம், முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வாள் மற்றும் கத்திகளை காட்டி அச்சுறுத்தி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொள்ளை சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7மணியளவில் ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியால்... Read more »

யாழ் மாதகல் பகுதியில் 60 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம்-மாதகல் பகுதியில் சுமார் 60 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று அதிகாலை 2 மணியளவில் மாதகல் கடற்கரையோரமாக குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. படகொன்றும் மீட்பு இதன்போது கேரள கஞ்சாவை கடத்த பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும்... Read more »

சிறுவர்கள் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மழையுடன் கூடிய காலநிலையால் சிறுவர்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சலி போன்ற நோய்கள் அதிகமாக பரவி வருவதாகவும், சிறுவர்களை பெற்றோர் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு சுகாதார தரப்பினர்... Read more »

அத்தியவசிய பொருட்களின் விலை தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள வர்த்தகர்கள்

எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா போன்ற சில அத்தியாவசியப் பொருட்களின் விலை அண்மைக்காலமாக குறைக்கப்பட்ட போதிலும், அதன் நன்மைகள் இன்னும் நுகர்வோருக்குச் சென்றடையவில்லை. இதற்கு ஏனைய பொருட்களின் விலையுயர்வுகளும் காரணம் என்று சில்லறை வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த வாரம், தனியார் வர்த்தகர்களால்... Read more »

தீபாவளியை முன்னிட்டு மூடப்படும் மதுபானசாலைகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் மூடப்படும். கலால் திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என பிரதி... Read more »

தீபாவளி கொண்டாட்டத்திற்கு மத்தியிலும் வெறிச்சோடி காணப்படும் யாழ் நகரம்

நாட்டில் நாளைய தினம் (24-10-2022) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ் நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் முதல் நாள் மக்கள் கூட்டத்தால் யாழ்ப்பாண நகரம் நிரம்பி வழியும் நிலையில், கொரோனாவுக்கு பின்னர் மக்கள் நடமாட்டம் குறைந்தே... Read more »

இரண்டு பிள்ளைகளுடன் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள யாழை சேர்ந்த பெண்!

இலங்கை தமிழ் பெண்ணொருவர் தனது வீடு உட்பட சொத்துக்களை விற்றுவிட்டு படகு வழியாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். தனது சொத்துக்களை விற்று கிடைத்த பணத்தை தமிழ்நாட்டிற்கு தப்பிச்செல்வதற்கு அவர் பயன்படுத்தியுள்ளார். அவரும் அவரது இரண்டு பிள்ளைகளையும் படகோட்டியொருவர் தனுஸ்கோடியில் விட்டுவிட்டு சென்றுள்ளார். மரைன் பொலிஸார் அவர்களை... Read more »