கிளிநொச்சி மாவட்ட சுற்றுவட்ட காரியாலயம், வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் கிளிநொச்சி அக்கராயன் ஜெயபுரம் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத ஆயுதங்கள் நேற்று முன்தினம்(02.01.2023) மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட சுற்றுவட்ட காரியாலயம், வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு குறித்த பகுதியில் வன விலங்குகளை... Read more »
யாழ். மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் அதிக மரணங்களும் பதிவாகின்றன, இது வரையான காலப்பகுதியில் 3421 நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் ஒன்பது மரணங்களும் பதிவாகியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் மேலும் பிளவு ஏற்பட்டுள்ளது என அக்கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் இருந்து இன்னோர் அணி பிரிந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து சுயாதீனமாக செயற்படப் போவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கருத்துக்களை புறக்கணிக்கும் அரசாங்கம் இந்தக் குழுவின் யோசனைகளையும், கருத்துக்களையும் அரசாங்கம் புறக்கணித்து... Read more »
இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆரையம்பதியை சேர்ந்த பரசுராமன் மாலதியே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளார். இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் (02.01.2023) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. Read more »
அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார். இன்று நள்ளிரவு முதல் 10 சதவீதத்தினால் குறித்த கட்டணம் குறைக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எரிபொருள் விலை குறைப்பு நேற்று முன் தினம் இரவு எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.... Read more »
வெற்றிலைக்கேணியில் நேற்று முன்தினம்(02.02.2023) நடந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். இதில், மருதங்கேணி பிரதேச செயலக ஊழியர் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெற்றிலைக்கேணியிலுள்ள பாடசாலையொன்றில் இறக்கி விட்டு ஆழியவளைக்கு திரும்பி வந்துள்ளார். இதன்போது, அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டின் பட்டி இணைக்கப்பட்டிருக்கவில்லையென்றும், ஹெல்மெட்... Read more »
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது. இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார். கட்டுப்பணங்கள்... Read more »
எரிபொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் வரி 27 ருபாவிலிருந்து 52 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. சுப்பர் டீசல் லீட்டரின் வரி 13 ரூபாவிலிருந்து... Read more »
இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் கோவிட் 19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை எமது செய்திப் பிரிவு தொடர்பு கொண்டு... Read more »
கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதால், அதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் இ.இரவீந்திரன் தெளிவுப்படுத்தினார். வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (03-01-2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்... Read more »

