ஐரோப்பிய பாராளுமன்றம் பலத்த அடிவாங்கியுள்ளது. இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டுவரும் பிரான்ஸ விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் இரண்டு வாரங்களை அண்மித்துள்ளது. சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் பிரான்ஸின் செயற்பாடுகளை முடக்கும் அளவுக்கு வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மீது... Read more »
சமூக ஊடகங்களால் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகக் கூறிய குடும்பத்தினரிடம் Meta CEO Mark Zuckerberg மன்னிப்பு கேட்டார். மெட்டா உள்ளிட்ட உலகின் முன்னணி சமூக ஊடக வலையமைப்பு நிறுவனங்களின் தலைவர்களை அமெரிக்க செனட் சபையின் முன் அழைக்கப்பட்ட போதே அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.... Read more »
பாகிஸ்தானில் பெப்ரவரி 8ஆம் திகதி பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜார் என்ற பழங்குடியின மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளரான ரெஹான் ஜெப் கான் என்பவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூட்டு நடத்தியுள்ளனர். மேலும், அவருடன் இருந்த... Read more »
அனைத்து 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் உக்ரேனுக்கு மேலதிகமாக 50 பில்லியன் யூரோ (54 பில்லியன் அமெரிக்க டொலர்) உதவி தொகையை வழங்க ஒப்புக் கொண்டுள்ளன. இந்தத் தகவலை ஐரோப்பிய ஒன்றிய பேரவையின் தலைவர் சார்லஸ் மைக்கேல் சமூக ஊடகத் தளமான எக்ஸில்... Read more »
வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே பணிபுரியும் திட்டத்தினை ஜேர்மனி அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளைமுதல் 6 மாதங்களுக்கு, குறித்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், வாரத்தில் மீதமுள்ள 3 நாட்களை விடுமுறையாக வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஜேர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதோடு,... Read more »
பிரான்ஸில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மூன்றில் ஒரு பங்கு தடைசெய்யப்பட்ட சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இதன்படி, சில சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (mineral water) போத்தல் பிராண்டுகளில் குழாய் நீருக்கு பயன்படுத்தப்படும் சுத்திகரிப்பு முறைமையை மாத்திரம் பின்பற்றுவதாக அரசாங்க விசாரணையை மேற்கோள் காட்டி... Read more »
மெக்சிகோவின் லாக்ரூஸ் நகரில் நெடுஞ்சாலையில் பேருந்தும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 22 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த போது பேருந்தில் 50 பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது. விபத்தை அடுத்து... Read more »
மலேசியாவின் தெற்கு மாநிலமான ஜோகரைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் புதன்கிழமை (31) நாட்டின் புதிய மன்னராக பதவியேற்றார். மன்னர் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அதிக செல்வாக்கு மிக்கவராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 65 வயதான சுல்தான் இப்ராகிம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம்... Read more »
பிரான்ஸ் அரசியலமைப்புச் சட்டத்திலேயே கருக்கலைப்பை மகளிர் உரிமையாக உறுதிப்படுத்தும் சட்ட முன்வரைவு, பிரான்ஸ் தேசிய அவையில் (பாராளுமன்றம்) நேற்று செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கருக்கலைப்பு உரிமைகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இதை அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்வதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல்... Read more »
புதிய சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகளுக்கு எதிரான பிரான்ஸ விவசாயிகளின் வீதி மறியல் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, தென்மேற்கு பிரான்ஸில் துலூஸ் விமான நிலையத்திற்கு செல்லும் வழியை தடுக்கும் வகையில் வைக்கோல் முட்டைகளை எரித்து விவசாயிகள் போராட்டத்தில்... Read more »

