இங்கிலாந்தில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பிரித்தானியாவில் (UK) கல்வியை தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களின் பராமரிப்பு நிதி வரம்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச மாணவர்கள் தனது கல்வி நடவடிக்கை முடியும் வரை தங்கள் வாழ்க்கைச் செலவுகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான நிதி ஆதாரத்தை பிரித்தானிய உள்துறை அலுவலகம் (Home... Read more »

வறுமை நிலைக்கு செல்லும் கனடா!

உலகின் செல்வந்த நாடுகளின் பட்டியலில் கனடா உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் உலகின் ஏனைய செல்வந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது அண்மைக்காலமாக கனடா செல்வந்த நிலையில் இருந்து வீழ்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து பிரித்தானியா போன்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது... Read more »
Ad Widget

மலேசியா – தாய்லாந்து எல்லையில் இலங்கையர் ஒருவர் கைது!

மலேசியா – தாய்லாந்து எல்லைச் சோதனைச் சாவடியில் வைத்து, போலி மலேசியக் கடவுச்சீட்டை வைத்திருந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதான இவர், ‘ராஜா டெனி டெனிஸ்’ (Raja Danny Denis) என்ற பெயர் கொண்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு செல்ல... Read more »

மீண்டும் பங்களாதேஷ் திரும்பும் ஷேக் ஹசீனா: மகன் அறிவிப்பு

பங்களாதேஷில் புதிய இடைக்கால அரசாங்கம் தேர்தலை தீர்மானிக்கும் போது முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்புவார் என அவரது மகன் தெரிவித்துள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்து அவர் கருத்து வெளியிடவில்லை. பல வாரங்களாக மாணவர்கள் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களால், பிரதமர் ஷேக்... Read more »

பிரித்தானியாவில் வதந்தியால் பரவிய வன்முறை

பிரித்தானியாவில் சிறுமிகள் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பரவிய வதந்தியால் நாட்டின் முக்கிய நகரங்களில் வரலாறு காணாத வன்முறை வெடித்துள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த பொலிஸார் கடும் முயற்சிகள் மேற்கொண்டுள்ள போதிலும், பொலிஸார் மீதும் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 29ஆம் திகதி நடன... Read more »

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம்: தலைமைத்தாங்க நாடு திரும்பினார் முஹம்மது யூனுஸ்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ், இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவதற்காக இன்று வியாழக்கிழமை பங்களாதேஷுக்குத் திரும்பியுள்ளார். பல வாரங்களாக மாணவர்கள் நடத்திய போராட்டங்களால், பிரதமர் ஷேக் ஹசீனா இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.... Read more »

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பானில் வியாழக்கிழமை (ஓகஸ்ட் 8) சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 7.1 நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGC) அறிக்கையில் தெரிவித்துள்ளது. தென்மேற்கு ஜப்பானிய தீவுகளான கியுஷு மற்றும்... Read more »

கனடா துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு

கனடாவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவ இடத்தை சென்றடைந்த போது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நால்வர் மீட்கப்பட்டனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனையவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.... Read more »

இஸ்ரேல் மீது தொடரும் தாக்குதல்: போர்ப்பதற்றம்

லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் மத்தியக்கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அண்மையில் இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழந்ததற்கு, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஹிஸ்புல்லா அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. குறித்த ஏவுகணைத்... Read more »

மத்திய கிழக்கில் போர்க்கப்பல்கள், விமானங்கள் குவிப்பு

மத்திய கிழக்கில் வன்முறை அதிகரித்துள்ள நிலையில் இஸ்ரேலை முடிந்தவரை பாதுகாப்பதற்கு இராணுவ உதவிகளை அதிகப்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதிகள் உட்பட ஈரானின் அனைத்து அச்சுறுத்தல்களில் இருந்தும் இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது படைகளை மத்திய கிழக்கில்... Read more »