இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராகும் சர்வதேச நாணயநிதியம்

இலங்கை அதிகாரிகளுடன் வழிகாட்டுதல் குழு மூலமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாக பொன்ட் ஹோல்டர்ஸ் குரூப் என்ற இலங்கை பத்திரதாரர்களின் குழு உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டினா ஜோர்ஜீவாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறித்த உறுதிப்பாட்டை இலங்கை பத்திரதாரர்களின் தற்காலிக குழு... Read more »

கொழும்பில் திடீரென மூடப்படும் வீதிகள்

இன்று (03) பிற்பகல் 3.00 மணி முதல் கொழும்பை சுற்றியுள்ள பல வீதிகள் மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். நாளை நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று இடம்பெறவுள்ள கலாசார இசை நிகழ்ச்சி முடியும்... Read more »
Ad Widget

75ஆவது தேசிய சுதந்திரதின கொண்டாட்டம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

75ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்தின் போது இடையூறு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக நுழைவு தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கோரிக்கைக்கு அமையவே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நாட்டில் 75ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (04.02.2023) கொழும்பில்... Read more »

யாழில் போதைப்பொருளுடன் கைதான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் பென் ஒருவரும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அரியாலை பகுதியில் 130 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை... Read more »

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான செய்தி

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரபரப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தபால் மூலம் வாக்களிக்கும் திகதி வெளியாகியுள்ளது. அதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more »

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மோதல்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிறு ஊழியர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், மற்றுமொரு வைத்தியசாலை சிற்றூழியர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் இலங்கை சுதந்திர பணியாளர்கள் சங்கம் மற்றும் தேசிய ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்க உறுப்பினர்கள் இருவரும் தேசிய வைத்தியசாலையில் சங்க... Read more »

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

எதிர்வரும் நான்காம் திகதி மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஒன்றுகூடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும், எப்போதும் பெப்ரவரி 4ஆம் திகதி தமிழருக்கு இருள் தினமாகும். எமது உரிமைகளை நாம்... Read more »

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைதீவு பிரதேச உள்ளூராட்சித் தேர்தலுக்கான கலந்துரையாடல்கள்

புனர்வாழ்வளிப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைதீவு பிரதேச உள்ளூராட்சித் தேர்தலுக்கான கலந்துரையாடல்கள், வாக்காளர் சந்திப்புக்கள் காரைதீவில் நடைபெற்றது. புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வேட்பாளர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர்... Read more »

புதிய காதலனுடன் இணைந்து முன்னாள் காதலனை தாக்கிய யுவதி!

களுத்துறை, அகலவத்தை பிரதேசத்தில் தனது புதிய காதலன் மற்றும் உறவினருடன் இணைந்து தனது முன்னாள் காதலனை தாக்கி யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டில் 17 வயது யுவதியே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட யுவதி பாடசாலை மாணவி எனவும், பாடசாலை... Read more »

இலங்கையில் தேடப்படும் பிரித்தானிய பிரஜை குறித்து பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்

காலி முகத்திடல் போராட்டத்தின் போது சமூக ஊடகங்களில் செயற்பட்ட பிரித்தானிய பிரஜையான Kayleigh Fraser என்பவரை கண்டுபிடிப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று விசா நிபந்தனைகளை... Read more »