75ஆவது தேசிய சுதந்திரதின கொண்டாட்டம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

75ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்தின் போது இடையூறு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக நுழைவு தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் கோரிக்கைக்கு அமையவே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நாட்டில் 75ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (04.02.2023) கொழும்பில் நடத்தப்படவிருந்த போராட்டம் தொடர்பிலலேயே நீதிமன்ற இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

நுழைவு தடுப்பு உத்தரவு
இதன்படி, 75ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நாளை (04.02.2023) எந்தப் போராட்டமும் நடத்தப்படக் கூடாது எனவும், காலி முகத்திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குள் நுழைவு தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor