அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைதீவு பிரதேச உள்ளூராட்சித் தேர்தலுக்கான கலந்துரையாடல்கள்

புனர்வாழ்வளிப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைதீவு பிரதேச உள்ளூராட்சித் தேர்தலுக்கான கலந்துரையாடல்கள், வாக்காளர் சந்திப்புக்கள் காரைதீவில் நடைபெற்றது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வேட்பாளர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் காரைதீவு பிரதேசத்திலுள்ள லக்ஷ்மி மகளிர் சங்கத்தினர் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கடசியை உள்ளூராட்சி தேர்தலில் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

 

Recommended For You

About the Author: webeditor