கடற்கரையில் குழந்தையின் சடலம் மீட்பு!

களுத்துறை வடக்கு கடற்கரையில் இரண்டரை வயது மதிக்கத்தக்க குழந்தையின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், குழந்தையின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாருக்கு முறைப்பாடு இல்லை அதேவேளை குழந்தை காணாமல் போனமை தொடர்பில், இதுவரை பொலிஸாருக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை... Read more »

முல்லைத்தீவில் பேரணி ஆரம்பம்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி விவகாரத்தில் சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று பாரிய பேரணியொன்று இன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது. இதில், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மதகுருமார், பொது மக்கள்... Read more »
Ad Widget

முதன் முறையாக இலங்கையில் அறிமுகமாகும் பங்கீ ஜம்பிங்

தென்னாசியாவின் உயர்ந்த கோபுரமாகத் திகழும் தலைநகரில் உள்ள தாமரைக் கோபுரத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பங்கீ ஜம்பிங் (BUNGEE JUMPING) ஆரம்பிப்பதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முகாமைத்துவ தலைவர் பிரசாந்த் சமரசிங்க கருத்து வெளியிட்டுள்ளார். இத்திட்டத்திற்காக கொழும்பு தாமரைக் கோபுரம் மற்றும் சிங்கப்பூர் கோ பங்கி... Read more »

யாழில் பூஜை ஈடுபட்டிருந்தவர் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் – வடமராட்சியில் வீட்டில் பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி – ஊறணி பகுதியைச் சேர்ந்த செல்வராசா செல்வமனோகரன் (வயது- 67) என்பவர் நேற்று வியாழக்கிழமை (27) உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம்... Read more »

முற்றாக முடங்கியது வடக்கு கிழக்கு

வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று பூரண ஹர்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பிற சேவைகள் முற்றாக முடங்கியுள்ளது. மன்னார் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம்... Read more »

தினமும் ஆரஞ்சு யூஸ் குடிப்பதால் உடலில் நிகழும் மாற்றங்கள்

ஆரஞ்சு பழத்தில் எண்ணற்ற சத்துக்குள் அடங்கியுள்ளன. நார்ச்சத்து, வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், கால்சியம் என்று சத்துக்கள் நிறைந்துள்ளது. சரி… தினமும் 2 டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் – 1. தினமும் ஆரஞ்சு... Read more »

வைத்தியசாலையில் தாக்குதலுக்கு இலக்கான மனநோயாளி உயிரிழப்பு!

கொழும்பில் உள்ள அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில், சிகிச்சைப்பெற்ற நோயாளி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், முல்லேரியா பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிழந்தவரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த தாக்குதல் சம்பவத்தில் வட்டரெக... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப் பொருளுடன் 6 சந்தேகநபர்கள் கைது!

ஒரு மில்லியன் ரூபா (இலங்கை மதிப்பில் 24 கோடி) பெறுமதியான போதைப்பொருளுடன் 6 சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் மூவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 30 கிலோ செயற்கை கஞ்சாவுடன் முதலில் கைது செய்யப்பட்டதாக... Read more »

கனடா குடும்பத்தாரால் லண்டனில் இரண்டான தமிழ் குடும்பம்

கனடாவிலிருந்து தனது பாடசாலை நண்பியை சந்திக்கச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 40 வயதான குடும்பஸ்தர் நண்பியின் கணவனால் நையப்புடைக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. யாழில் ஒரே வகுப்பில் கல்வி கற்றவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பின் காரணமாகவே கனடாவில் வசித்து வந்த குறித்த... Read more »

யாழில் சடலமாக மீட்க்கப்பட்ட மூதாட்டி தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாண பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (27-07-2023) தென்மராட்சி – மட்டுவில் வடக்கில் இடம்பெற்றுள்ளது. யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய... Read more »