யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது இன்று முதல் மறுஅறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. இதனை (28) மாநகர ஆணையாளர் இன்று அறிவித்துள்ளார். தீயணைப்பு வாகனத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தவேலை காரணமாகவே இவ்வாறு தீயணைப்புச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார். Read more »
தெல்தெனிய வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட 18 வயதுடைய இளைஞன் அலைபேசிக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அலைபேசியை கைப்பற்றியதையடுத்து கத்தியை எடுத்து தனது உடலின்... Read more »
உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிலையில் இந்த புதிய கண்டத்தை விஞ்ஞானிகள் ஜீலந்தியா (Zealandia) என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். கண்டுபிடிக்கபப்ட்ட புதிய கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 8 ஆவது கண்டம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நிகழ்வு... Read more »
இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஷெரீன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டில் அரசாங்க வைத்தியசாலைகளில் 52% மரணங்கள் மாரடைப்பால் ஏற்பட்டதாக அவர்... Read more »
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் (27-09-2023) ஜேர்மனிக்கு சென்றுள்ளார். ஜனாதிபதி ரணில் ஜேர்மனியில் இருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்பு பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஐந்து பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இராஜாங்க... Read more »
பிரித்தானியாவில் பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்த மாணவியை சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் க்ராய்டன் பகுதியில் உள்ள விட்கிஃப்ட் அருகில் 15 வயது மாணவி ஒருவர் பாடசாலைக்கு செல்லும் வழியில் 17 வயது டீன் ஏஜ்... Read more »
இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் கடனாக வாங்கிய 1,500 ரூபாயை திருப்பிக் கொடுக்காததால் தலித் சமூகத்தை சேர்ந்தவரின் மனைவியின் ஆடையை களைந்து சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பீகார் மாநிலம் – பாட்னா மாவட்டம் மோசிம்பூர்... Read more »
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் (11.10.2023) ஆம் திகதிக்கு பின்னர் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. முறையற்ற வரிக்கொள்கை, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க சுகாதார அமைச்சருக்கு எதிர்வரும் (11.10.2023) ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அவர்கள்... Read more »
யாழ் வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று (28) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகோற்சவத்தில் இன்று அதிகாலை வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று வல்லிபுரப் பெருமான் காலை 8 .45 மணியளவில் தேரில்... Read more »
அவுஸ்திரேலியா பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் வழக்கு இன்று சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சாட்சி... Read more »

