ராஜபக்ஷவினர் மீதான குற்றச்சாட்டுக்களை தேசிய மக்கள் சக்தி நிரூபித்துக் காட்ட வேண்டும்!- சாகர

”ராஜபக்ஷவினர் மீதான குற்றச்சாட்டுக்களை தேசிய மக்கள் சக்தி நிரூபித்துக் காட்ட வேண்டும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தியினர் ராஜபக்ஷ தரப்பினர் மீது பல... Read more »

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாகப் போராட்டம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று சிறிகொத்த கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் கெஸ்பேவை தொகுதி அமைப்பாளர் உபுல் மலேவன தலைமையிலான குழுவினரே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.... Read more »
Ad Widget

பொதுத் தேர்தல்: முக்கிய இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி?

பொதுத் தேர்தலில் கூட்டணியாகக் களமிறங்குவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடையும் நிலைமையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த இரண்டு பிரதான நிபந்தனைகளே இதற்கு காரணம்... Read more »

வெளிவிவகார அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

லெபனான் மற்றும் சிரியாவுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி லெபனான் மற்றும் சிரியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் லெபனான் மற்றும் சிரியாவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களையும் அவதானமாக... Read more »

மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தரமற்ற இம்யுனோகுளோபுளின் மருந்துகள்?

”தரமற்ற இம்யுனோகுளோபுளின் மருந்துகள், நாட்டுக்கு மீண்டும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் விசேட வைத்திய நிபுணர், சமன் சன்ஜீவ இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார். தரமற்ற மருந்து மற்றும் தடுப்பூசிகள் சந்தையில் விநியோகிக்கப்பட்டு, மக்களின் உயிருக்கு... Read more »

பொதுத் தேர்தலை எதிர்க்கொள்ள அஞ்சும் தேசிய மக்கள் சக்தியினர்- கயந்த கருணாதிலக

பொதுத் தேர்தலை எதிர்க்கொள்ள தேசிய மக்கள் சக்தியினர் அஞ்சுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலின் போது நூற்றுக்கு 50 வீத பெரும்பான்மையினை பெறமுடியாமல் போனமையினால் முதற்தடவையாக விருப்பு வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் 43 வீத வாக்குகளினால்... Read more »

1000 ஆண்டுகள் பழமையான ஈழத்து நாணயம்!

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் பாடசாலை மாணவிகள் மூவர், தங்கள் வீடுகளுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது ராஜராஜ சோழன் (கி.பி. 985-1012) பெயர் பொறிக்கப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான ஈழத்து நாணயத்தைக் கண்டுபிடித்துள்ளனர். சுரேஷ் சுதா அழகன் மெமோரியல்... Read more »

தேர்தலுக்கான திடீர் அழைப்பை விடுத்த ஜப்பான் பிரதமர்!

பதவியேற்கவுள்ள ஜன்பானின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா, ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) தலைமைப் போட்டியில் வெற்றி பெற்ற மூன்று நாட்கள் கழித்து தேர்தலுக்கான திடீர் அழைப்பினை விடுத்துள்ளார். அதன்படி, ஒக்டோபர் 27 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.... Read more »

மூன்று mpox தொற்றுள்ளவர்கள் பதிவு!

பாகிஸ்தானில் மேலும் மூன்று mpox தொற்றுள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சவூதி அரேபியாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு வந்த மூன்று பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனையின் பின்னர் mpox அறிகுறிகள் தென்பட்டதாக கராச்சி விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதற்கிடையில்,... Read more »

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து!

அபுதாபியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ராஸ் அடேரின் அற்புதமான சதத்தின் உதவியுடன் அயர்லாந்து தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து வரலாறு படைத்தது. சயீத் கிரிக்கெட் மைதாத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களை... Read more »