கனடாவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவ இடத்தை சென்றடைந்த போது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நால்வர் மீட்கப்பட்டனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனையவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.... Read more »
தன் மீது சுமத்தப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தாம் அரசியலில் இருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தன் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி அதனூடாக அரசியல் செய்து... Read more »
லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் மத்தியக்கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அண்மையில் இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழந்ததற்கு, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஹிஸ்புல்லா அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. குறித்த ஏவுகணைத்... Read more »
பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடுவதற்கு சட்டரீதியான அடிப்படைகள் எதுவும் இல்லை என்பதை எடுத்துரைத்தார். தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு... Read more »
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (04) கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் இத்தீர்மானதை எடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் மூன்று... Read more »
மாவட்ட தலைமை பதவிகளுக்கு புதிய தற்காலிக நியமனங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. அநுராதபுரம் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கம்பஹா மாவட்ட தலைவராக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில்... Read more »
மத்திய கிழக்கில் வன்முறை அதிகரித்துள்ள நிலையில் இஸ்ரேலை முடிந்தவரை பாதுகாப்பதற்கு இராணுவ உதவிகளை அதிகப்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதிகள் உட்பட ஈரானின் அனைத்து அச்சுறுத்தல்களில் இருந்தும் இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது படைகளை மத்திய கிழக்கில்... Read more »
உலகில் மனிதர்கள் அழிந்துவிட்டாலும் ஒரேயொரு உயிரினம் மட்டும் வாழும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், அப்படியொரு உயிரினம் தான் டார்டிகிரேட். தமிழில் இதை நீர்க்கரடி என்று அழைப்பார்கள். இந்த விலங்கினால் உணவு மற்றும் நீர் இல்லாமல் 30 ஆண்டுகள் வரையில் வாழ... Read more »
இணைய விசா சேவை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள முறைமையை மாற்றி, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து சேவையைப் பெறுவதற்கு அமைச்சரவை குழு மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவால், ஏற்படவிருந்த பாரிய நிதி மோசடி மற்றும் குற்றச்செயல்களை தடுக்க முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய... Read more »
யாழ்ப்பாணம் , சுன்னாகம் பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். சங்கானை பகுதியைச் சேர்ந்த 51 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில், சுன்னாக சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் வான் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து... Read more »