வவுனியாவில் பாடசாலை உட்பட பலருக்கு பழுதடைந்த முட்டை விற்பனை: சுற்றி வளைத்த சுகாதார பரிசோதகர்கள் வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள முட்டை விற்பனை நிலையத்தில் பாடசாலை உட்பட பலருக்கு பழுதடைந்த முட்டை விற்பனை செய்ததாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையை... Read more »
யாழ்ப்பாணம் (Jaffna) கோண்டாவில் வீதியால் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நாராயணன் வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கலியுகவரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வறுமை காரணமாக... Read more »
தமிழ் சினிமாவில் புதுமுகங்களுக்கென்றே எப்பொழுதும் ஒரு விசேஷமான வரவேற்பு உள்ளது. அந்த வகையில், தற்போது இலங்கையைச் சேர்ந்த ராப் பாடகர் ஒருவர், ஹீரோவாக களமிறங்குவதற்கான அதிரடி முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். வாகீசன் எனப்படும் இந்த ராப் பாடகர், வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மைனர்’ திரைப்படத்தின்... Read more »
கல்கிஸ்ஸை, ஹுலுதாகொட பகுதியில் உள்ள பாழடைந்த காணி ஒன்றிலிருந்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கி எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ரத்மலானை, மஹிந்தாராம வீதியை சேர்ந்த 23 வயதுடைய டிகிரா என்றழைக்கப்படும் காவிந்த கயாஷன் ரணவக்க என்பவராவார். குறித்த... Read more »
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து, அரசாங்கத்தக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறைகூவல் விடுத்துள்ளார். தலவாக்கலையில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறைகூவலை... Read more »
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று 01.05.2025 இரவு 9 .40 மணியளவில் கொழும்பில் பூரணம் அடைந்தார் (இறையடி சேர்ந்தார்.) இலங்கை தலைநகர்கொழும்பில் வைத்திய சிகிச்சைபெறவந்திருந்த அவர், கொழும்பு வெள்ளவத்தை கம்பன் கழகத்தில் தங்கி இருந்த... Read more »
எமது மக்கள் அலையை கண்டு எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதமளவில் ஜனாதிபதியாக நினைப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆகவே, ஜனாதிபதியாக வேண்டும் என்ற சிந்தனையில் உள்ளவர்கள் அந்த சிந்தனையை திருத்தம் செய்துகொள்ள வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய... Read more »
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கல் ஆணைக்கழுவினால் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்... Read more »
பகிடிவதையால் அவமானம் தாங்க முடியாது மனமுடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 27 ஆம்... Read more »
2025ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிகளில் நாட்டில் 17,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 5,018 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர், வைத்திய நிபுணர் சுதத்... Read more »

