ஜனாதிபதி வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் முன்னாள் நீச்சல் வீரர் ஒருவரிடம் விசாரணை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது தீ மூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரபல முன்னாள் நீச்சல் வீரர் ஜுலியன் போலிங்கிடம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது. சுமார் எட்டு மணித்தியாலங்கள் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்ற விசாரணைப் பிரிவில் நேற்றைய தினம் ஜுலியன் போலிங்... Read more »

நாட்டில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு!

இலங்கையில் பாரியளவில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதனால் நோயாளிகள் உயிராபத்தை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சத்திர சிகிச்சைகளின் போது பொதுவாக பயன்படுத்தும் மயக்க மருந்து வகைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் இதனால் நோயாளர்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அகில இலங்கை... Read more »
Ad Widget

தனது காதலை கேலி செய்தமையால் உயிரை மாய்த்துக் கொண்ட இராணுவ கமாண்டோ!

கொழும்பின் புறநகர் பகுதியான ஜாஎல பிரதேசத்தில் இளம் இராணுவ கமாண்டோ ஒருவர் தற்கொலை செய்துள்ளார். தனது காதலை கேலியாக எண்ணிய காதலியின் நடத்தையால் மனம் உடைந்த 21 வயது இராணுவ கமாண்டோ ஒருவரே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக ஜாஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

கனடாவில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 11 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட நம்பிக்கை மீறல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை நாளை (19ம் திகதி) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார். நான்கு நிதி மோசடி வழக்குகள் தொடர்பில் காலி நீதவான்... Read more »

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான அறிவித்தல்!

2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றாத மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. இதற்கமைய, 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைக்கு தோற்ற முடியாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சைகளில் தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. பரீட்சை நிலையங்களின்... Read more »

பல்வகைப்பட்ட நோய்களிற்கு எமனாகும் எலுமிச்சை

எலுமிச்சைப் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. அற்புதம் வாய்ந்த எலுமிச்சையை கொண்டு பல்வேறு நோய்களை போக்கலாம் என்பது தெரியுமா?. புற்றுநோயை தடுக்க புற்று நோய்களுக்கு எதிரான மருத்துவ சிகிச்சைகளில் சிட்ரஸ் பழ வகைகளில் ஒன்றான எலுமிச்சை அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. எலுமிச்சையில் வைட்டமின் சி... Read more »

லாப் எரிவாயு விலை குறைப்பு!

நாட்டில் லாப் எரிவாயு அடங்கிய 12.5 கிலோ கிராம் கொள்கலன் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (17-08-2022) முதல் இது நடைமுறைக்கு வருவதாக லாப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையடுத்து புதிய லாப் கொள்கலனின் விலை 5800 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என்று... Read more »

முட்டை மற்றும் இறைச்சி விற்ப்பனையில் வீழ்ச்சி!

முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகளின் அதிகரிப்பை தொடர்ந்து அவற்றின் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் ஒன்றிய அமைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கால்நடை உணவுகளின் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள்... Read more »

யாழில் சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஜவர் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத செயலில் ஈடுபட்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உட்பட ஐவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி குற்றச்செயலில் ஈடுபட்ட... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பை தேடி செல்லும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையின் கீழ் ஆள் கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம் மற்றும்... Read more »