போராட்டக்கள செயற்பாட்டாளர் ரந்திமால் கமகே கைது!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில், போராட்டக்கள செயற்பாட்டாளர் ரந்திமால் கமகே கைது செய்யப்பட்டுள்ளார். ரந்திமால் கமகே நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more »

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்தித்துக் கொண்டார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று சந்தித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பில் உள்ள இல்லத்திற்கு நேற்று மாலை விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.... Read more »
Ad Widget

விண்வெளிக்கு சென்று வந்த முதல் அமெரிக்க விண்வெளி வீரர் மரணம்!

அப்பல்லோ 7’ விண்கலத்தில் விண்வெளி சென்று வந்த விண்வெளி வீரர் கன்னிங்ஹாம்(Cunningham)உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இன்றுவரை மனிதகுலத்தின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுவது நிலவில் மனிதன் இறங்கியது தான். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ‘அப்பல்லோ’ என்ற திடத்தின் மூலம் இதை சாதித்து காட்டியது. அதற்கு முதல்... Read more »

பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரான்ஸ் மக்களின் பணம் பறிக்கும் புதிய இணைய மோசடிகள் குறித்து எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடிகளைக் கண்காணிக்கும்படி பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது எரிசக்தி கட்டணங்களுடன் போராடும் வாடிக்கையாளர்களிடமிருந்து இலாபம் தேடுவதற்கு முயற்சிக்கும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மோசடியார்கள் பயனர்களை சந்தேகத்திற்கு... Read more »

இலங்கையின் பால் உற்பத்திக்கு உதவும் இந்தியா

பால் மற்றும் பால் தொடர்பான பொருட்களில் இலங்கை தன்னிறைவு அடைய உதவுவதற்கு இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது, பால் உற்பத்திக்கு ஆதரவு... Read more »

நாடு திரும்பினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய

விடுமுறைக்காக டுபாய் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (05) நாடு திரும்பியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி டிசம்பர் 26ஆம் திகதி தனது குடும்பத்தாருடன் டுபாய்க்கு சென்றார். இந்நிலையில், அவர் இன்று நாடு திரும்பியுள்ளார். Read more »

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோ – 201 ரூபாவால் குறைக்கப்படுகிறது. அதன் புதிய விலை 4,409 ரூபா 5 கிலோ – 80 ரூபாவால் குறைக்கப்படுகிறது. அதன் புதிய விலை 1,770 ரூபா 2.3 கிலோ – 38... Read more »

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்!

கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர... Read more »

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இடம் பெற்ற சிறுநீரக மோசடியுடன் தொடர்புடைய நபர் தப்பி ஓட்டம்!

கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நாட்டில் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் போலி... Read more »

நடைபெறவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஜனவரி 23 ஆம் திகதி நள்ளிரவு வரை தகுதியான வாக்காளர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்னதாக, உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி... Read more »