இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கும் நடைமுறை தொடர்பிலான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விரைவில் புது டெல்லி செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என அமைச்சர் கூறியதாக... Read more »

மாணவர்களுக்கு போதை மாத்திரை விநியோகிக்கும் மருத்துவர்

பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த வைத்தியரிடமிருந்து 145 மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக அவற்றை வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 44 வயதுடைய வைத்தியரொருவரே... Read more »
Ad Widget

அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பெற்றுக் கொடுக்கும் வேலைதிட்டத்தின்போது தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இவ்வாறான நிலையில், 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு (2,850,000) அரிசி பெற்றுக்... Read more »

வைத்தியசாலையில் ஒன்றில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தல் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இராஜகிரியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 4 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. கைதானவர்களை இன்றைய தினம் (14-02-2023) கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்களை எதிர்வரும் 28... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஒத்தி வைப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை காலவரையறையின்றி ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என ஆணைக்குழுவின் பேச்சாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு பணம் கிடைக்காத காரணத்தினாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். உரிய கொடுப்பனவுகள்... Read more »

காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழப்பு

திருகோணமலை–தோப்பூரில் காட்டு யானை தாக்கி ஒருவர் நேற்று(14.02.2023) உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் தோப்பூர் – அல்லைநகர் 09 எனும் கிராமத்தைச் சேர்ந்த குப்பைத்தம்பி அப்துல்காதர் என்ற 83 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். கோவமடைந்த யானை குடியிருப்பு காணியில் நுழைந்த காட்டு யானை வீட்டில் இருந்த... Read more »

நான் சரியான நேரத்தில் மீண்டும் வெளிவருவேன் என கூறும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

சரியான நேரத்தில் வெளியே வருவேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்றும் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும்... Read more »

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(15.02.2023) இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. புதிய அறிவிப்பு இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதிகளில் பகலில்... Read more »

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கான அறிவித்தல்!

தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டி பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போது அரச சேவையில் கடமையாற்றும் பட்டதாரிகள்... Read more »

காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான கடற்பாதை குறித்து வெளியாகியுள்ள செய்தி

காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான கடற்பாதை சேவை மட்டுப்படுத்தப்பட்டதால் அப்பாதையை பயன்படுத்தும் பல தரப்பினரும் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அந்த பாதையை காரைநகர் பிரதேச சபை ஆகிய எங்களிடம் தந்தால் அதனை திறம்படச் செய்வோம் என காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.... Read more »