உணவகங்களில் சிற்றுண்டிகளின் விலை குறைப்பு!

உணவகங்களில் சிற்றுண்டிகளின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விலைகள் இன்று (09) அறிவிக்கப்படும் என அதன் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார். இதேவேளை நேற்று முதல் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைப்பதற்கு... Read more »

இலங்கை இளைஞர் யுவதிகளை இத்தாலியில் தொழில் வாய்ப்புகளுக்காக இணைத்துக் கொள்ளும் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன

இலங்கை பணியாளர்களை இத்தாலியில் தொழில் வாய்ப்புகளுக்காக இணைத்து கொள்வதற்காக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள கோரப்படவுள்ளன. இணையத்தளம் ஊடாக இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 87,702 தொழிலுக்கான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. பாரவூர்தி சாரதிகள்,... Read more »
Ad Widget

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி

நடைபெற்று முடிந்த 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தாமதமாகும் எனவும், விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தொடர்ந்தால் 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க நேரிடும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில்... Read more »

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்தமை தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி வெளியிட்டுள்ள தகவல்

வவுனியா – குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் நால்வர் அடங்கிய குடும்பத்தினர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. வவுனியாவில் மர்மமான முறையில் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கான சட்டவைத்திய பரிசோதனை நேற்றைய தினம் (8) இடம்பெற்றிருந்தது. இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவில்... Read more »

இன்றைய ராசிபலன்09.03.2023

மேஷம் மேஷம்: வழக்கு சாதகமாக தீர்ப்பு வரும். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும்... Read more »

யாழ்பல்கலைக்கழக மாணவர் சுலக்சனின் 31 வது பிறந்தநாள் நினைவு இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

2016 ம் ஆண்டு பொலிஸாரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்பல்கலைக்கழக மாணவர் சுலக்சனின் 31 வது பிறந்தநாள் நினைவு இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு 10 ம் மாதம் 21 ம் திகதி இரவு வேளை வீடு திரும்பிக்கொண்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான... Read more »

வட மாகாணத்தில் இடம்பெற்ற மகளீர் தின நிகழ்வுகள்

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம் இன்று வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் YMCA மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி. வேணுகாராணி சுஜீப்குமார் கலந்துகொண்டார். வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர்களுக்கான கெளரவிப்பும்... Read more »

சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்கள்

யாழ். போதனா வைத்தியசாலைச் சுகாதார ஊழியர்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 6.00 மணி முதல் நாளை காலை 6.00 அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், சுகாதார ஊழியர்கள்... Read more »

வேலணையில் ஊரி அகழ்வுக்கு அனுமதி

யாழ்.ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பணிப்பு – வேலணையில் ஊரி அகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு அத்தியாவசிய தேவையின் அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கை குறித்து ஆராய்வு! யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முன்னாய்த்த கூட்டத்தில் வழங்கப்பட்ட... Read more »

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்கள்

கொழும்பில் சற்றுமுன் பல்கலைக்கழக மாணவர்கள் பெருந்திரளானோர் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்றைய தினம் கண்ணீர்ப்புகைக்குண்டுகள் வீசப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுடன், பேராசிரியர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆர்ப்பாட்டம்... Read more »